ஸ்வேதா சுனிலிடம் ஐந்து மணி போல் வர சொன்னாள்.சென்டர் க்கு சென்ற அவள், தன் வேலையை பார்த்து கொண்டிருந்தாள்.அப்போது ப்யூன் ராமு வந்து ,அவளை பார்க்க ஒருவர் வந்திருப்பதாக சொல்ல ,யார் நம்மை பார்க்க வந்துள்ளார் என்ற ஆர்வத்தில் பார்க்க அவளுக்கு ஒரு அதிர்ச்சி,அங்கு வந்திருந்தது அவளின் இன்னொரு தோழி விஜி .ஸ்வேதா ,"விஜி எப்படி இருக்க ?.. நீ சென்னைலையா இருக்க ?நான் இங்க இருப்பது உனக்கு எப்படி தெரியும் ?என்ன விஷயம் ? என்று கேட்டாள்.
விஜி கண்ணீர் மல்க ," ஸ்வேதா நான் என்ன சொல்றது ,என் வாழ்க்கையே ஒரு கேள்விக்குறி ஆயிடுச்சி ? நீ சென்னை போன பிறகு, எனக்கும் சென்னை வர வேண்டும் ,வேலையில் சேர வேண்டும் என்ற ஆர்வம் வர ,பெற்றோரிடம் சொல்லி விட்டு சென்னை வந்தேன்..பல இடங்களில் வேலை தேடியும் நல்ல வேலை கிடைக்கவில்லை.உன்னை பார்க்கலாம் என்று நினைத்தேன் ஆனால் நானும் ஒரு வேலையில் அமர்ந்த பின் தான் உன்னை பார்க்கவேண்டும் என்ற பிடிவாதம் எனக்குள்.
அப்படி ஒரு சூழ்நிலையில் தான் எனக்கு ஒரு கம்பனில் வேலை கிடைத்தது அங்கு வேலை பார்த்த ரமேஷ் என்னை காதலிகிறேன் என்று சொல்ல நானும் அவரை காதலிக்க ,என் பெற்றோரை மீறி அவரை திருமணம் செய்து கொண்டேன் .ஒரு மாதம் சந்தோசமாக தான் போனது , ஆனால் இன்று அந்த கம்பெனி எ மூடிட்டாங்க .எங்க இருவருக்கும் வேலை இல்ல ....என் அம்மா அப்பா கிட்ட கேட்டா நீயா கல்யாணம் செஞ்சுகிட்ட ,நாங்க உனக்கு உதவ முடியாதுன்னு சொல்லிட்டாங்க ....ரமேஷின் குடும்பமும் சொல்லி கொள்ளும் படி வசதி இல்ல,இவருடைய சம்பளம் வச்சி தான் அங்க குடும்பம் ஓடுது ....இப்போ பாரு என்னோட நிலைமை , அடுத்து எதாவது வேலை சென்றால் தான் எங்க குடும்பத்தையே ஓட்ட முடியும் .....அப்போ தான் உன்னோட நினைவு வர , உன் அக்காகிட்ட போன் செய்து இந்த அட்ரஸ்ஸை வாங்கினேன்.நீ தான் யாரிடமாவது சொல்லி வேலை வங்கி தரணும் ,எனக்கோ இல்லை என்னோட கணவருக்கோ ...." என்று குமுறலுடன் முடித்தாள்.
ஸ்வேதா,"கட்டாயம் நான் எங்க ஹெட் கிட்ட ,மாமா கிட்ட சொல்றேன் ..உன்னோட ரெசுமே என்கிட்டே கொடுத்திட்டு போ. எதையும் மனசுல போட்டு குழப்பிக்காத " என்று ஆறுதல் சொல்லி அவளுடைய போன் நம்பரை வாங்கி கொண்டு அனுப்பினாள்.விஜியின் கதைய கேட்ட ஸ்வேதாவுக்கு மனமெல்லாம் பாரம் . விஜிக்கு இப்படி ஆகிவிட்டதே ? என்று உடனே கோபாலனிடம் சென்று அவளுக்காக உதவி கேட்டாள்.
மதியமே சேகர் வந்தான் , மிகவும் கவலையாக காணபட்டான். ஸ்வேதா ஆறுதல் கூறியபடியே சேகரின் குடும்பத்தை பற்றி கேட்க ஆரம்பித்தாள் .சேகர்," எனக்கு அம்மா இல்ல ,இரண்டு வருடம் முன்பு தான் அம்மா தவறிட்டாங்க ,அப்பா , இரண்டு தம்பிகள், இருவரும் கல்லூரியில் படிக்கிறார்கள்.அப்பாவின் பென்ஷன் மற்றும் என்னுடைய சம்பளம் தான் இப்போ வருமானம் ,தம்பிகள் படித்து முடித்து வேலையில் அமர்ந்து விட்டால் எனது பாரம் குறையும் .என் குடும்பத்தை , தாய் போல இருந்து வழி நடத்த ஒரு நல்ல மருமகளை தான் என் அப்பாவும் தேடி கொண்டிருக்கிறார் ............" என்று சொன்னான். மறைமுகமாக தன் முடிவை எதிர்பார்க்கிறான் சேகர் என்பதை உணர்ந்தாள் ஸ்வேதா.
Hello world!
-
Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then
start writing!
3 years ago
No comments:
Post a Comment