10 January 2010

தெளிவான முடிவு 16

காலையில் எல்லோரும் சுனிலின் கிரகப்ரவேசதுக்கு புறப்பட்டார்கள் . ஸ்வேதா தன்னை நன்றாக அலங்காரம் செய்து கொண்டாள்.மங்களகரமாக மஞ்சள் நிற பட்டு புடவை அணிந்தாள்.சுதா அரை மனதுடனே வந்தாள்.சுனிலின் வீட்டின் முன் அவர்கள் சென்ற ஆட்டோ நின்றது .வாசலில் நின்றிருந்த சுனில் அவர்களை வரவேற்றான் ."வாங்க சுரேஷ் வாங்க சுதா , நீங்க வந்ததில எனக்கு ரொம்ப சந்தோசம் ,ஸ்வேதா உள்ள வாங்க .."என்று சொல்ல ,எல்லோரும் அவனை பின்தொடர்ந்தார்கள் .பட்டு வேட்டி சட்டையில் அவன் அழகாக இருக்க,ஸ்வேதா அவனையே பார்த்து கொண்டிருந்தாள்.
வீட்டின் உள்ளே சென்ற சுனில் ,அவன் பெற்றோர் இருக்கும் இடத்திற்கு இவர்களை அழைத்து சென்று ,அவர்களுக்கு அறிமுக படுத்தினான்.சுனிலின் அம்மா அப்பா ,அவன் முன்பே சொன்னது போல வயதானவர்களாக தென்பட்டார்கள்.இருவரும் நாற்காலியில் அமர்ந்திருந்தார்கள் .சுனில் ,"அம்மா நான் நேத்து சொன்னேன்ல அவுங்க இவர்கள் தான் ,இது ஸ்வேதா மா நான் இவுங்கள தான் அன்றைக்கு ஆபீஸ் போய் பார்த்தேன் " என்று சொன்னான் .சுனிலின் அம்மா சுமதி ஸ்வேதா வை பார்த்து புன்னகைத்தாள்.
ஸ்வேதாவும் வணங்கி சிரித்தாள்.
சுமதி ," உங்க எல்லாத்தையும் பத்தி சுனில் சொன்னான் .உங்கள பார்க்க சந்தோசமா இருக்கு .என்னால தான் உங்க வீட்டிற்கு வர முடியல, நீங்க எல்லோரும் குடும்பத்தோடு வந்தது எங்களுக்கு மகிழ்ச்சி, இருந்து டிபன் சாப்பிட்டு தான் போகணும் " என்று சொன்னார். சுமதியை பார்த்த சுதாவுக்கு அவர்களின் நிலைமை புரிந்தது .இதனால் தான் சுனில் இப்படி நடந்து கொண்டான் என்று புரிந்து கொள்ள முடிந்தது .
சுமதி ,"ஸ்வேதா நீ இந்த புடவையில் அழகா இருக்க மா ,சுனிலை உனக்கு புடிச்சிருக்கா ?"என்று கேட்க ,ஸ்வேதாவுக்கு ஒன்றும் புரியல ,"ஆமா புடிச்சிருக்குன்னு சொல்லிடலாமா" என்று யோசனை வர,ஆனால் அதை மறைத்து , "அக்கா மாமாக்கு பிடிச்சா எனக்கும் ஒ.கே தான் ,அவர்களால தான் நான் இந்த நிலைமை வந்திருக்கேன்" என்றாள் . அதற்குள் சுனில் அனைவரையும் சாப்பிட அழைத்தான் .எல்லோரும் சென்று சாப்பிட்டு வந்தார்கள்.சுரேஷும் சுதாவும் ,அங்கு வந்திருந்த நண்பர்களிடம் பேசி கொண்டிருக்க ,ஸ்வேதா தனியாக நின்று கொண்டிருந்தாள் .சுனில்,"வாங்க ஸ்வேதா வீட்டை சுத்தி பார்க்கலாம் " என்றான்.

தெளிவான முடிவு 15

அடடா சுனில் நம் வீட்டிற்கு வந்தும் நம்மால் பேச முடியவில்லையே... என்று தன்னையே நொந்து கொண்டாள். அப்போது சுரேஷும் சுதாவும் பேசி கொண்டிருப்பது காதில் விழுந்தது .சுதா , " என்ன இது புதுசா இருக்கு ,நீங்க ஏன் சுனிலை வீட்டிற்கு அழைத்து வந்தீங்க ? பெண் பார்க்கவே வீட்டிற்கு வராதவன் ,இன்னைக்கு மட்டும் ஏன் வந்தான் ? முன்ன பின்ன தெரியாத அவன் வீடு கிரகப்ரவேசதுக்கு நம்ம போனுமா ? ஸ்வேதா வ நேத்து தான் பார்த்தான்,இன்னும் அதுக்கே முடிவு தெரியல ....இது என்னமோ எனக்கு சரியாய் படல " என்று அடுக்கி கொண்டு போனாள்.
"நீ ஏன் அப்படி நினைக்கிற ..சுனில் எனது நண்பனின் நண்பன் ..நண்பன் என்ற முறையில் நம்மை கூப்பிடிருக்கிறான் .இதுல என்ன தப்பு இருக்கு ?உன்னால முடிஞ்சா போ ,இல்லேன்னா போகாதே ....ஸ்வேதாவை அவனுக்கு பிடிச்சிருக்குன்னு தான் நினைக்கிறேன்...அதனால கூட அவன் நம்மல அழைத்திருக்கலாம் , " என்று சுரேஷ் தொடர,ஸ்வேதா குறிகிட்டாள்.
" மாமா நீங்க பேசினத நான் கேட்டுகிட்டு தான் இருந்தேன் ...இன்னைக்கு நான் சுனிலுக்கு மதியம் போன் செய்தேன் ,என்னோட கொலீக் வந்ததால, அவர்ட்ட சரியாய் பேச முடியல,நீங்க வந்ததும் சொல்லலாம்னு நெனைச்சேன் ,மாமா நாளைக்கு எத்தனை மணிக்கு நாம் சுனில் வீட்டுக்கு போறோம் " என்று ஸ்வேதா சொல்ல,சுதா கோபத்தில் ," என்னடி பேசற, நாங்க போகலாமா போக வேண்டாமா ன்னு சண்ட போட்டுட்டு இருக்கோம்.நீ என்னன்னா எப்போ போகலாம் ன்னு கேக்குற .?அந்த சுனில்..இன்னும் பதிலே சொல்லல ...அவங்க வீட்டுக்கு எந்த முறை வச்சி போறது ?
அதற்கு ஸ்வேதா ," மாமா சொன்ன மாதிரி ,நாம friend என்ற முறையில் போவோம் ....இதுல ஒன்னும் தப்பில்லக்கா ..."என்று பேச ,சுதா பதிலுக்கு ,"சரி நீங்க ரெண்டு பேரும் சொல்றதால நாம நாளைக்கு போவோம் ,"
என்றாள்.எப்படியோ அக்காவை சம்மதிக்க வைத்து விட்டோம் என்ற திருப்தியில் ,ஸ்வேதாவுக்கு மனதிற்குள் மகிழ்ச்சி ...நாளை எப்படியும் சுனிலை பார்க்க போகிறோம் ,அவனோடு பேச போகிறோம் என்று கனவுகளில் மிதந்தாள்.