ஸ்வேதா பிரிய மனமில்லாமல் அந்த இடத்தை விட்டு சென்றாள்.ஆட்டோ வில் செல்லும் போதே அவள் அக்கா சுதவிடமும் மாமா சுரேஷிடமும் சுனில் சொன்னதை சொல்ல ,"ரொம்ப சந்தோசம் டி சுனிலின் அம்மா அப்பாவ பார்த்தா நல்லவங்க போல தான் தெரியுது ,நான் கூட முதல்ல சுனிலை பத்தி தப்பா தான் நெனச்சேன் , ஏன்னா அவன் உன்ன பத்தி ஒன்னும் சொல்லாம இருந்தான்,பாரு உன்கிட்ட நேராவே சொல்லிட்டான்....அம்மாக்கு இன்னைக்கே போன் செய்து சொல்லறேன் .நல்ல நாள்ல நல்ல முடிவு தெரிஞ்சிடுச்சு ...." என்று சுதா மகிழ்ச்சியாய் சொன்னாள். சுரேஷும் ," நான் அப்பவே சொன்னேன் ,நீங்க தான் நம்பள ,இப்போ புரிஞ்சிடீங்கள்ள " என்றான். சென்ட்டர் வர , ஸ்வேதா அங்கு இறங்கி உள்ளே சென்றாள்.
இந்த நாள் நம் வாழ்வின் பொன்நாள் என்று முக மலர்ச்சியுடன் தன் வகுப்பறைக்கு சென்றாள் . நாளை எப்போது வரும் ,சுனிலை பார்க்கும் போது என்ன பேசலாம் ? என்ற சிந்தனை தான் அவளுக்குள் .சுனிலுக்கு எதாவது மெசேஜ் அனுபலாமா என்று யோசித்தாள்,வேணாம் அவர் இப்பொது பிசியாக இருப்பார் என்று அவளையே சமாதானம் செய்து கொண்டாள். அவள் தன் அறையுள் இப்படி நினைத்து கொண்டிருக்க ,அங்கு வந்தான் சேகர்.முன்பெல்லாம் சேகர் வந்தால் , ஆர்வமாய் பேசுவாள் .
ஆனால் இப்போதோ சேகரை பார்த்தாலே , இவன் ஏன் இங்கு வர்றான் ? என்று தான் தோன்றுகிறது . சேகர் ," ஹாய் ஸ்வேதா ,இன்னைக்கு நல்லா டிரஸ் பண்ணி இருக்கீங்க ? எதாவது function க்கு போயிருந்தீங்களா ?காலையில் கூட permission போட்டிருந்தீங்க !! இப்பெல்லாம் என்கிட்டே எதுவுமே சொல்றது இல்ல ?" என்று ஆதங்கப்பட்டான் .ஸ்வேதா ,"உங்க கிட்ட சொல்ல கூடாதுன்னு ஒன்னும் இல்ல சார், மாமாவோட நண்பர் வீட்டு கிரகப்ரவேசதுக்கு போயிட்டு வந்தேன் அதான் ...வேற ஒண்ணுமில்ல சார்" என்றாள்.சேகர் மேலும் தொடர ," O.K இன்னைக்கு ஒரு சின்ன treat ,Lunch க்கு நாம பக்கத்துல உள்ள restaurant க்கு போலாமா "?என்று கேட்டான் .
ஸ்வேதாவும் மறுப்பேதும் சொல்லாமல் ,"ஒ.கே நாம போகலாம் " என்றாள்.
மதிய நேரம் வர,இருவரும் ஹோட்டல் சென்றார்கள்,சாப்பிட்டார்கள் .ஐஸ் கிரீம் சாப்பிடும் போது ஸ்வேதா ஆரம்பித்தாள் ,"இன்னைக்கு எதற்கு treat எதாவது விசேஷமா?" என்று கேட்க .சேகர் ,"இல்ல ஸ்வேதா சும்மா தான்............ "என்றான் . சற்று தடுமாற்றத்துடன் சேகர் ,"ஸ்வேதா நீங்க என்ன தப்பா நினைக்க கூடாது ,நீங்க சென்டர் வந்து சேர்ந்த நாள்ல இருந்து உங்கள எனக்கு புடிக்கும் ...அப்போ ஆசையாய் இருந்தது........ இப்போ காதலாய் ...... . மாறிடிச்சு " என்றான்.
Hello world!
-
Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then
start writing!
3 years ago