30 December 2009

தெளிவான முடிவு 8

ஸ்வேதா தான் வாங்கிய அனைத்தையும் அக்கா சுதாவுக்கு காண்பித்தாள்.சுதாவுக்கு ஒரே ஆச்சரியம் ..."நீ நம்ம ஊர்ல வீட்ட விட்டு வெளிய வர மாட்ட ஆனா ,இன்னைக்கு எங்க எல்லோருக்கும் துணி வாங்கி வந்திருக்க ..ரொம்ப சந்தோசமா இருக்கு ,சென்னை உன்ன நல்ல துணிச்சலான பொண்ணா மாத்திருச்சு"
என்று ஸ்வேதாவை புகழ்ந்தாள்.ஸ்வேதாவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
மறுநாள் காலை ஸ்வேதா சென்டருக்கு சீக்கிரமே கிளம்பினாள்.ஏனென்றால் அவளுக்கு first batch க்கு க்ளாஸ் எடுக்க வேண்டி இருந்தது...மதியம் 1 மணி இருக்கும், சுதா reception இல் காத்திருபதாக சேகர் வந்து சொன்னதும் ,ஸ்வேதாவுக்கு தூக்கி வாரி போட்டது ...."ஏன் சுதா இங்கு வந்தாள்? நான் வேலையில் சேரும் போது கூட வரவில்லை ? இன்று காலையில் வீட்டில் கூட எதுவும் சொல்லவில்லை...எதற்கு என்னை பார்க்க இவ்வளவு தூரம் வந்திருக்கிறாள் ,அம்மாவுக்கு உடம்புக்கு ஏதாவதா ? என்று பலவாறு நினைத்து கொண்டே சுதாவை நெருங்கினாள்.
சுதா,ஸ்வேதாவை பார்த்ததும் புன்னகைத்தாள். சுதா," என்ன ஸ்வேதா என்ன
பார்த்ததும் பயந்திட்டியா? எல்லாம் நல்ல விஷயம் தான் ...முக்கியமானதும் கூட
அதுக்கு தான் நான் நேர்ல வந்தேன் .....உனக்கு call கூட பண்ணல .....Sorry " என்றாள்.ஸ்வேதா,"சரி க்கா வந்துட்ட என்ன முக்கியமான விஷயம் ,எனக்கு அடுத்து க்ளாஸ் இருக்கு ....சொல்லு சீக்கிரம் "என்று பறந்தாள்.சுதா,"உன்னோட மாமா உன்ன பத்தி அவருடைய நண்பர்ட்ட சொல்லி இருந்தாரு..அவருக்கு தெரிந்த நண்பருக்கு வரன் பார்கிராங்கலாம் ...மாபிள்ள இங்க தான் உங்க சென்டர்க்கு பக்கத்துல இருக்கிற software company ல தான் வேலை பார்கிறாராம் ...
3 மணிக்கு உன்னை இங்க வந்து பார்க்கலாம் என்று உள்ளார் " என்று முடித்தாள் .
ஸ்வேதாவுக்கு ஒன்றுமே புரியவில்லை.

28 December 2009

தெளிவான முடிவு 7

ஸ்வேதாவும் சேகரும் நல்ல நண்பர்கள் ஆனார்கள். சேகர் மற்றவர்களிடம் கூட அதிகம் பேச மாட்டான் ,ஆனால் ஸ்வேதாவிடம் அவனை பற்றியும் பகிர்ந்து கொண்டான்.ஸ்வேதாவுக்கு சென்னையில் உள்ள பல இடம் சேகர் மூலம் தான் தெரிய வந்தது...அன்றும் அப்படி தான் , இவர்கள் பேசி கொண்டிருந்தார்கள்.
ஸ்வேதா அப்போது அவனிடம் ," என் அக்கா குழந்தைக்கு பிறந்த நாள் வருது ,அவளுக்கு ஒரு நல்ல dress வாங்கணும்...என் அக்காவுக்கும் மாமாவுக்கு கூட நான் வாங்கணும் .வேலையில் சேர்ந்த வுடன் அவர்களுக்கு செய்ய வேண்டும் என்று நினைத்தேன் mobile க்கு செலவு செய்து விட்டு அம்மாவுக்கு பணம் அனுப்ப சரியாக இருந்தது...இந்த மாதம் அக்காவுக்கு செலவு செய்ய நினைக்கிறேன் , அவ கிட்ட கேட்ட வேணாம் என்று தான் சொல்வாள்..அதான் நானா வாங்கலாம்னு யோசிச்சிடிருகேன்... நீங்க எதாவது நல்ல shop சொல்லுங்களேன் " என்றாள்
சேகர் ,"இங்க T.Nagar ரெங்கநாதன் தெரு தான் பிரபலம் .....நீங்க அங்க போனா எல்லோருக்கும் துணிமணி வாங்கலாம் .நம்ம நினைச்ச காசுல வாங்கலாம் . நம்ம எடத்துல இருந்து நீங்க எலெக்ட்ரிக் train ல போகலாம் ,
கொஞ்சம் கூட்டமாக இருக்கும் நீங்க கவனமா போகணும் ....." என்றான்.
ஸ்வேதா ,"சரி இந்த வாரமே போகலாம்,எனக்கு அந்த எடம் புதுசு ,நீங்க என் கூட வந்தாநல்லா இருக்கும் " என்று கேட்க அவனும் சரி என்றான்.
சனிகிழமை இருவரும் பல கடைகள் ஏறி ,ஸ்வேதா நினைச்ச படி எல்லா dress உம் வாங்கினாள்.ஷாப்பிங் முடித்து இருவரும் களைப்பை ஒரு ஜூஸ் கடையில் நின்றார்கள் ...அப்போது சேகரிடம் ," நீங்க வந்ததால தான் என்னால இங்க லாம் வர முடிந்தது ....அக்கா மாமா இருவரும் வேலை வேலை ன்னு ரொம்ப பிஸி ,ஷாப்பிங் ன்னு என்ன அவுங்க கூட்டி போனதே இல்ல ...வேலை விட்டு வரும் போதே எல்லாத்தையும் வாங்கி வருவாங்க , உங்க மூலமா தான் எனக்கு சென்னை தெரியுது ,ரொம்ப தேங்க்ஸ் " என்று ஸ்வேதா முடித்தாள். ஒரு புன்முறுவலுடன் ஓகே என்றான் சேகர்...
ஸ்வேதா நேராக பஸ் பிடித்து வீடு சென்றாள்.


14 December 2009

பஸ் ஜோக்ஸ்

பஸ்ஸில் போகும் போது என் பையில் ஒருத்தன் பிளேடு போட்டுட்டான்.
அப்புறம் என்னாச்சி?
பிளேடை தூக்கி வெளியில் போட்டு விட்டேன்.
____________________________________________________________________
இப்ப புறப்புட்டு போன பஸ் எங்கையாவது போய் விபத்தாகிடும்னு சொல்றீங்கேள நீங்க என்ன ஜோசியரா?
இல்ல, இந்த பஸ் டிரைவர்.
____________________________________________________________________
பஸ் கண்டக்டரை காதலிக்கிறது அப்பாவுக்கு தெரிந்து போச்சினியே, என்ன சொன்னார்?
ரைட் சொல்லிவிட்டார்.

____________________________________________________________________
பஸ்ஸில் 2 பின் போகுது. ஒரு பின் சீட்டில் உட்கார்ந்து விடுகிறது. ஒரு பின் படிக்கட்டில் நின்று கொண்டு வருகிறது. எது முதலில் இறங்கும்?.
நின்ற பின் தான் முதலில் இறங்கும் ஏன் என்றால் பஸ்ஸில் நின்ற பின் இறங்கவும் என போர்டு போட்டிருக்கே.

___________________________________________________________________ பஸ் ஸ்டாண்டில் ஏன் பஸ் நிற்குது?
அதனால் உட்கார முடியாது.
____________________________________________________________________
நேத்து பஸ்சுக்காக 3 மணி நேரம் காத்துக் கிட்டு நின்னேன்.
அப்புறம்..என்ன ஆச்சு ..?
கால் வலிச்சதால உட்கார்ந்திட்டேன்.
___________________________________________________________________ கண்டக்டரே, அடுத்த ஸ்டாப்பில் நான் இறங்கணும்.
அதை ஏன்யா எங்கிட்ட சொல்றே, அதோ ட்ரைவர் தூங்கிட்டிருக்கார், எழுப்பி அவர் கிட்டே சொல்லு.
___________________________________________________________________
3 யானை பஸ் ஸாண்டிற்கு வந்தது. பஸ்ஸில் 2 யானை மட்டும் ஏறியது 1 யானை ஏறவில்லை ஏன்?
அது வழியனுப்ப வந்தது.
___________________________________________________________________
பஸ்ஸீல் சீட் இருந்தும் நின்னுகிட்டே வந்தேன்
சீட் இருந்தும் ஏன் நின்னுகிட்டே வந்தீங்க?
சீட்டில் எல்லோரும் உட்கார்ந்திட்டிருந்தாங்க.
____________________________________________________________________
நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம்
ஆனா
ஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி நிக்க முடியாது.
___________________________________________________________________ வண்டி இல்லாமல் டயர் ஓடும்.
ஆனால்...
டயர் இல்லாமல் வண்டி ஓடுமா?
___________________________________________________________________
ஹோடெல்லா காசு இல்லேன்னா மாவாட்ட சொல்லுவாங்க ...
பஸ்ல காசு இல்லேன்னா பஸ் ஓட்ட சொல்லுவாங்களா ??
___________________________________________________________________
பஸ் ஸ்டாப்ல வெயிட் பண்ணா பஸ் வரும் ......
புல் (full) ஸ்டாப்ல வெயிட் பண்ணா புல் வருமா???
___________________________________________________________________
பஸ் கண்டக்டர கல்யாணம் பண்ணது தப்ப போச்சு ..
ஏன் ?
எல்லாத்துக்கும் விசில் அடிக்கிறாரே......
____________________________________________________________________

தெளிவான முடிவு 6

ஸ்வேதா சென்டர் வந்து சேர்ந்தாள்.சேகர் வந்திருந்தானா ? என்று பார்த்தாள்.அவன் தன்னுடைய வேலையில் மும்பரமாய் இருந்தான் .அவள்,
சேகரிடம் ,"ஹாய் சேகர் , குட் மார்னிங் ,நீங்க எனக்கு எவ்வளவோ உதவி பண்ணி இருக்கீங்க .....அதற்காக உங்களுக்கு ஒரு கிப்ட் ,என் நன்றிய தெரிவிக்க ஒரு பரிசு....கட்டாயம் நீங்க வாங்கிக்கணும் வேண்டாம்னு சொல்லிடாதீங்க " இதனை எதிர் பார்க்காத சேகர் முதலில் சற்று தயங்கினான் , பின்பு பெற்று கொண்டான் . "தேங்க்ஸ்" என்ற பதில் மட்டும் வந்தது .
ஸ்வேதாவும் தன்னுடைய வேலையில் மூழ்கினாள்.வேலை முடித்து வீடு
வந்தவுடன் ...அவளுக்கு சேகர் பற்றி எண்ணம் தோன்றியது...."ஏன் அவர் ஒன்றும் சொல்லாமல் என் பரிசை வாங்கி கொண்டார் ....என்னை தப்பா நெனைசுட்டாரா"? என்று யோசித்து கொண்டிருந்தாள் ....நாட்கள் பல சென்றது ......ஸ்வேதாவும் வேலையை தொடர்ந்து கொண்டிருந்தாள் . அவளுக்கு வரும் வருமானத்தில் ஒரு பகுதியை தன் அம்மாவுக்கு அனுப்பி விடுவாள். அக்காவுடன் இருப்பதால் , அவளுக்கும் பணம் கொடுத்து விட்டு ,மீதம் இருப்பதாய் தனக்கு வைத்து கொண்டாள்.
சென்டர் வரும் எல்லோரிடமும் மொபைல் இருப்பதை பார்த்தாள்.தனக்கும் வாங்க வேண்டும் என்று ஆசை தோன்ற , அதை பற்றி சேகரிடம் கேட்டாள்.
சேகர்," எனக்கு ஒரு நல்ல மொபைல் வாங்கனும்னு ஆசையா இருக்கு ,நீங்க தான் ஹெல்ப் பண்ணனும் " என்றாள்.சேகர் அவளிடம் ,"நம்ம சென்டர் அருகில் நோக்கியா ஷோ ரூம் இருக்கு ,நீங்க afternoon வாங்க நாம்
போய் பார்க்கலாம் " என்றான். தனியே ஒரு ஆணுடன் கடைக்கு செல்வது என்பது ஸ்வேதாவுக்கு முதல் முறை .
அவர்கள் இருவரும் லஞ்ச் முடிந்தவுடன் ,அருகில் இருந்த கடைக்கு சென்றார்கள்..சேகர் , Rs.2000 க்கு ஒரு நல்ல நோக்கியா போனும் ,ப்ரீயாக சிம் கார்டும் வாங்கி கொடுத்தான் .. ஸ்வேதாவுக்கு சந்தோசம் ,அந்த மொபைல் கலரும் ,நம்பரும் அவளுக்கு ரொம்பவே பிடித்து இருந்தது ....சேகரிடம் "ரொம்ப தேங்க்ஸ் " என்றாள்..சேகர் அதற்கு "ஸ்வேதா போன தடவ மாதிரி இப்பவும் எனக்கு வாட்ச்,கிப்ட் ,பரிசு ன்னு என்ன அந்நியன் ஆக்கிடாதிங்க " என்று சிரித்த படியே சொன்னான் ...
ஸ்வேதா மொபைல் தன் கையில் வந்தவுடன் உலகமே தன் கையில் இருப்பது போல் உணர்ந்தாள்.operate பண்ண தெரியாமல் விழித்தாள்...சேகர் தான் ,தன் செல் நம்பரை போட்டு அவளுக்கு கற்று கொடுத்தான் ... உடனே தன் அம்மாவுக்கு call பண்ணி பேசினாள்.

09 December 2009

டாக்டர் ஜோக்ஸ்

அர்த்த ராத்திரியில் அந்த டாக்டர் கத்தியோட எங்க போறாரு ?
"அவருக்கு தூக்கத்துல ஆபரேஷன் பண்ற வியாதியாம் ".
________________________________________________________________________
குளிர் காலத்தில் ஆபரேஷன் பண்றதா இருந்தா அந்த டாக்டர்க்கு ரொம்ப பிடிக்குமாம் ......
ஏன் ?
ஆபரேஷன் பண்றப்போ கை நடுங்கினா குளிர்ல நடுங்குது ன்னு சொல்லி சமாளிக்க தான் .......
________________________________________________________________________
ஒருவர் கண் டாக்டரிடம் , டாக்டர் எனக்கு எதை பார்த்தாலும் இரண்டு இரண்டா தெரியுது .......
அதற்கு என் மூணு பேர் வந்திருக்கீங்க ன்னு டாக்டர் கேட்டாராம் .....
___________________________________________________________________
கண் வலின்னு டாக்டர்ட்ட போனியே என்ன ஆச்சு ?
அவரே பார்க்கும் நேரம் 9 -12 ன்னு போட்டிருக்கார்...
அவருக்கே கண்ணு அப்ப தான் தெரியும் போலிருக்கு....
நாம வேற நல்ல டாக்டர்ட்ட போகலாம்...
___________________________________________________________________
டாக்டர் , 10 மணிக்கு நீங்க சாப்பிட சொன்ன மாத்திரையை 6 மணிக்கே சாப்பிட்டு விட்டேன். அப்புறம் என்னாச்சு?
நான் கடிகாரத்தை 10 மணிக்கு திருப்பி வைச்சிட்டேன்.
நல்ல அறிவாளி .......
___________________________________________________________________ டாக்டர் ,நேத்து நீங்க கொடுத்த டியூப் மாத்திரை பெரிசா இருந்தது ஆனாலும் கஷ்ட்டப்பட்டு எப்படியோ முழுங்கிட்டேன்
அடப்பாவி தெம்பெரச்சர் பார்க்க வச்சிருந்த தர்மா மீட்டரை முழுங்கிட்டயா?
___________________________________________________________________
என்னது காய்ச்சலுக்குன்னு போன உனக்கு ஆப்ரேஷன் நடந்துச்சா, இது என்ன கொடுமை ?
அவங்க வெச்சிருந்தா தர்மா மீட்டரை முழுங்கிட்டேன், அதான்!!!
____________________________________________________________________
நோயாளி : டாக்டர் , என் காதுக்குள் பல்லி போயிருச்சி ?
டாக்டர் : ஏம்பா காதுல பல்லி போகிற வரைக்கும் என்ன பண்ணிட்டிருந்த ?
நோயாளி: ஏற்கனவே கரப்பான்பூச்சி காதுக்குள்ளே போயிடுச்சி அதை பிடிச்சிட்டு பல்லி வந்துடும்னு பார்த்தேன்.
____________________________________________________________________ மருந்து குடித்தவுடன் ஒருவர் எகிறி எகிறி குதிக்கிறாறே ஏன்?
டாக்டர் ,மருந்தை சாப்பிடும் முன் நன்கு குலுக்கி விட்டு சாப்பிட சொன்னாராம். ஆனால் அவர் மருந்தை குலுக்காமல் அப்படியே சாப்பிட்டு விட்டாராம். அதான்.
____________________________________________________________________ ஒரு சைடு மூக்ல மட்டும் பொடி போடுறீங்களே ஏன்?
மூக்குப் பொடி போடறதை டாக்டர் பாதியா குறைச்சுக்க
சொன்னாருங்க அதான்.
____________________________________________________________________
இருமல், இருமல்னு டாக்டர்ட்ட போனியே, டாக்டர் என்ன சொன்னார்?
இது இருமல் தான்னு அவரும் ஒப்புக்கிட்டார்.
____________________________________________________________________
இந்த டாக்டர் ரொம்ப மோசம். என் மனைவியை பார்க்கவந்த என்னை பெட்டில் அட்மிட் பண்ணிவிட்டார்?
நீங்களாவது பரவாயில்லை, நான் போஸ்ட் மேன், போஸ்ட் டெலிவரி கொடுக்க வந்த என்னை பெட்டில் அட்மிட்ட பண்ணிவிட்டார்.
___________________________________________________________________
அந்த டாக்டர் போலின்னு கண்டுபிடிச்சிட்டியா, எப்படி?
கால்ல வெடிப்பு இருக்குதுன்னே!!!
உள்ளே போனவர் கம் பாட்டிலை எடுத்துட்டு வந்து ஒட்டமுயற்சிக்கறாரு.
அந்த டாக்டர் போலின்னு கண்டுபுடிச்சிட்டேன் ......
எப்படின்னே ?
கால்ல ஆணி இருக்கு ன்னு சொன்னேன்...
காலேண்டர் எடுத்து மாட்ட சொல்றாரு ....
____________________________________________________________________
நர்ஸ் : நீங்க இன்னிக்கு ஆப்ரேஷன் பண்ண இருந்த பேஷண்ட்
தப்பிச்சு ஓடிட்டார்.
டாக்டர் : சரி பரவாயில்லை விடுங்க பிழைச்சு போகட்டும்.
____________________________________________________________________
நோயாளி : வயிறு எரியுது டாக்டர்
டாக்டர் :எப்போதிலிருந்து?
நோயாளி : என் மனைவி பக்கத்து வீட்டு காரனோட சிரிச்சுச் சிரிச்சுப் பேசினதை பார்த்ததிலிருந்து டாக்டர்.
____________________________________________________________________
இரும்பிக்கிட்டே இருக்கிற அவன் ஏன் டாக்டர் போட்டாவை
பார்த்துகிட்டே இருக்கான்
அவங்க அம்மா இருமல் வந்தா டாக்டரை பார்க்க சொன்னாங்களாம்.
____________________________________________________________________ என்னங்க! அவர் வாசல்ல ரோமியோபதி டாக்டர்னு போர்டு போட்டிருக்கார்!
ஆமாங்க. அந்த டாக்டர் பயங்கர ஜொள்ளுப் பார்ட்டி!
____________________________________________________________________
கேஸ் சிலிண்டரை எடுத்துக் கெண்டு டாக்டரை பார்க்க போகிறார் ஏன்?
கேஸ் பிராப்ளம் வந்தால் டாக்டர் தன்னை வந்து பார்க்க சொன்னாராம்.
____________________________________________________________________ என்ன டாக்டர் ஆப்ரேஷனுக்கு முன்னாடி பேஷண்ட் நெத்தியில கத்தியால ஒரு கோடு போடுறாரு...?
அது பிள்ளையார் சுழியாம்....
_____________________________________________________________________
டாக்டர் நான் செத்து போய்விடுவேனா ?,
இல்லை...! இல்லை...! நான் வைத்தியம் பண்ணினவங்கள்ள பத்துக்கு ஒன்பது பேர்தான் சாவாங்க...! நீங்கபொழச்சிப்பீங்க.
____________________________________________________________________ அவர் ஏன் கண்னை கட்டி கொண்டு இனிப்பு சாப்பிடுகிறார்.
டாக்டர் இனிப்பை கண்ணால் கூட பார்க்கக்கூடாதுன்னு சொல்லி விட்டாராம். ____________________________________________________________________
டாக்டர்,கொஞ்ச நாளா என் கணவருக்கு தூக்கத்துல பேசற வியாதி இருக்கு...
பகல்ல பேசறதுக்கு நீங்க கொஞ்சம் பர்மிஷன் கொடுத்தா சரியாய் போயிடும். ____________________________________________________________________
கொடுத்த பணத்தை தரலைன்னா பல்லை புடுங்கிடுவேன்னு சொல்லிட்டு போறாறே யார் அவர்?
எங்க ஏரியா பல் டாக்டர்...!
____________________________________________________________________ டாக்டர் என்னை பத்து நாள் ரெஸ்ட் எடுக்க சொல்லிட்டாரு
நல்லா தூங்கணுமே... ஆபீஸ்க்கு லீவு போடறிங்களா?
ம்ஹும் ஆபிஸ்க்கு லீவு போடாம போயிடுவேன்.
____________________________________________________________________
ஆப்ரேஷன் தியேட்டருக்குள்ள போகும்போது எதுக்கு டாக்டர் நிறைய புத்தகம் எடுத்துக்கிட்டு போறாரு?
புத்தகம் படிச்சு படிச்சு ஆப்ரேஷன் பண்ணுவாரு.
____________________________________________________________________
வீட்டுக்கு போனா மறந்தாப்புல தூங்கிடுறேன் டாக்டர்.
இதிலொன்னும் தப்பில்லையே
திருடப் போன வீட்டுல தூங்கிட்டா நான் மாட்டிக்குவேனே டாக்டர்...!
____________________________________________________________________ ஆஸ்பத்திரிக்கு என் மனைவியை கூட்டிட்டு போகும் போது வாசல்படியிலேயே பிரசவம் ஆயிடுச்சு
அப்ப டோர் டெலிவரின்னு சொல்லு...!
____________________________________________________________________
டாக்டர் இந்த ஆப்ரேஷன்ல நான் பிழைச்சிடுவேனா?
அது தெரியாது, ஆனா கடன் தொல்லையில் இருந்து நான் பிழைச்சிடுவேன்.
____________________________________________________________________
உங்களுக்கு எப்பயிலேர்ந்து தலைவலி அதிகமா இருக்கு?
உங்க பீஸ் பில்லை பார்த்ததிலிருந்து டாக்டர்.
____________________________________________________________________
டாக்டர் நோயாளியிடம் மருந்து கொடுத்தார். நோயாளி டாக்டரிடம் டானிக் எந்த அளவு சாப்பிடனும் என்றார். டாக்டர் 1 மூடி, 2 வேளை சாப்பிடனும் என்றார்.
மறுநாள் நோயாளி டாக்டரிடம் ஒருவேளை சாப்பிட்ட பின் எவ்வளவு டானிக் சாப்பிடனும் என்றார். டாக்டர் அதே 1 மூடி என்றார்.
அதற்கு நோயாளி அந்த மூடியை நேற்றே சாப்பிட்டேன். இன்று சாப்பிட மூடி இல்லையே சார் என்றார்.
_______________________________________________________________________
டாக்டர் எனக்கு 3 மாதமா கடுமையான இருமல்?
அப்படியா? சும்மாவா இருந்தீங்க..
இல்ல டாக்டர் இருமிக்கிட்டே தான் இருந்தேன்.
_______________________________________________________________________
டாக்டர் நீங்க ஆபேரஷன் பண்ணினதுல இருந்து எனக்கு ஒரே தும்மலா வருது.
அடடா...! என்னோட பொடி டப்பா உங்க வயிலுத்துல தான் இருக்கா?
____________________________________________________________________
ஒரு பருவப்பெண்னின் தகப்பனார் ஒரு டாக்டர். அவர் மகளிடம் அவசரம் அவசரமாக பேசினார். அந்த ஸ்டெதஸ் கோப் எடு, சூட்கேஸை எடு, எமர்ஜென்ஸி கால்ல யாரோ நான் உடனே வராவிட்டால் செத்துவிடுவேன் என்று சொல்லுகிறார்கள்.
பெண் நிதானமாக சொன்னாள் அப்பா அந்த போன் எனக்கு வந்தது.
____________________________________________________________________
டாக்டர் என் கணவர் தூக்கத்துல பேசுகிறார்?
அப்பவாது அவர் பேசட்டும் விட்டுடுங்க...!
____________________________________________________________________
உடம்புக்கு ஆயிரம் வியாதி வரத்தான் செய்யும் அதுக்காக இப்படி பயந்தா எப்படி?
நான் பயப்படறது நோய்க்கு இல்ல டாக்டர், உங்களுக்கு தான்.
_____________________________________________________________________
தினமும் ஒரு பச்சை முட்டை சாப்பிட சொல்றீங்க ஆனா என்னால் முடியாது டாக்டர்
ஏன்?
எங்க கோழி வெள்ளை முட்டைதான் போடும் டாக்டர்.
_____________________________________________________________________
ஸ்பூனை ஏன் இரண்டாக உடைச்சீங்க...!
அரை ஸ்பூன் மருந்து மட்டும் டாக்டர் சாப்பிடச் சொன்னாரே
_____________________________________________________________________
டாக்டர் நீங்க கொடுத்த மருந்து மாத்திரையெல்லாம் சாப்பிட் டேன் உருண்டையா இருந்த பெரியகண்ணாடி மாத்திரைதான் முழுங்க சிரமமா இருந்தது.
அடப்பாவி பேப்பர் வெயிட்டை எடுத்துட்டு போனது நீதானா?
________________________________________________________________________
ரொம்ப சிரமமா இருக்கு டாக்டர்!
எது?
நர்ஸை சிஸ்டர்னு கூப்பிடுறது!
_______________________________________________________________________
உங்க வயித்துல நிறைய கேஸ் இருக்கு
எத்தனை சிலிண்டர் ஆகும் டாக்டர்?
____________________________________________________________________
டாக்டர் என் மாமியார் கால்ல முள் குத்திடுச்சு
முள்ளை எடுக்கணுமா?
முள் சின்னது. அதையேன் தொந்தரவு பண்ணணும்? காலை எடுத்துடுங்க.
____________________________________________________________________
ஊசி குத்தினால் வலிக்காதுன்னு சொன்னீங்க இப்ப பயங்கரமா வலிக்குது டாக்டர்?
எனக்குத்தான் வலிக்காதுன்னு சொன்னே.
____________________________________________________________________ பகல் கனவு பலிக்குமா டாக்டர்...!
பலிக்காது ஏன் கேட்கறீங்க...?
நீங்க ஆபரேசன் செஞ்சு, நான் பிழைக்கிற மாதிரி கனவு கண்டேன்.
____________________________________________________________________
தம்பி உடையான் படைக்கு அஞ்சான் . ஏன்?
ஏன்னா என் தம்பி ஸ்கின் ஸ்பெஷலிஸ்ட்.
_____________________________________________________________________
டாக்டர் தொழிலை விட்டுடலாம்னு பார்க்கிறேன்.
ஏன் பேஷண்ட் யாரும் வர்றதில்லையா?
இல்ல பேஷண்ட் யாரும் பிழைக்க மாட்டேங்கிறாங்க !!
____________________________________________________________________
ஹலோ டாக்டர் என் மாமியார் பிழைச்சிடுவாங்களா?
உங்க மாமியார் பிழைச்சிட்டாங்க. இன்னும் ஒரு நிமிஷம் லேட்டா வந்திருந்தா. உயிரோட பார்க்க முடியாது.
பாழாப் போன ஆட்டோக்காரன் சீக்கிரமா வந்து தொலைச்சிட்டான். ச்சே...!
____________________________________________________________________
நீங்க அதிர்ஷ்டசாலி டாக்டர்
எப்படி சொல்றீங்க?
உங்களுக்கு ஏதாவது ஆப்ரேஷனா, நீங்க பண்ணிக்க வேண்டியதில்லை பாருங்க.
____________________________________________________________________
நோயாளி - 10 வருடமா எனக்கு ஞாபகமறதி இருக்கு டாக்டர்
டாக்டர் - ஏன் இவ்வளவு நாட்களாக தாமதாமக வருகிறீர்கள்.
நோயாளி - மறந்து போச்சு டாக்டர்.
____________________________________________________________________
உங்களுக்கு அல்சராமே?
அந்த வயிற்றெரிச்சலை ஏன் கேட்கிறீங்க?
____________________________________________________________________
இன்னிக்கு நம்ம டாக்டர் நாலு உயிர்களை காப்பாத்திட்டார்...!
அப்படியா ...! எப்படி...!
இன்னிக்கு நடக்க இருந்த 4 ஆபரேஷனையும் தள்ளி வச்சிட்டார்...!
_____________________________________________________________________

தெளிவான முடிவு 5

ஸ்வேதா இரவெல்லாம் சிந்தித்து தன்னை ஒரு படி முன்னேற்றி கொள்ள நினைத்தாள்.காலையில் எழுந்து ஆங்கில பத்திரிகை படிக்க ஆரம்பித்தாள்.தன்னுடன் LIFCO Dictionary வைத்து கொண்டு அர்த்தங்களை புரிந்து ,க்ராம்மருடன் பயில முயன்றாள்.... சென்டர்ல சேகருடன் நன்றாக ஆங்கிலத்தில் பேச முயற்சி செய்தாள்..இவ்வாறு அவள் செய்த முயற்சிகள் ஸ்வேதாவை ஆங்கிலத்தில் சரளமாக பேச உதவிற்று ...
1 மாதம் எப்படி போனதென்றே தெரியவில்லை...கோபாலன் ஸ்வேதாவை அழைத்த பொது தான் அவளுக்கு புரிந்தது ......"நீங்கள் நாளையில் இருந்து உங்கள் faculty job ஐ தொடரலாம் " என்று கோபாலன் கூறியதும் மிகவும் மகிழ்ச்சி அடைந்தாள். வேகமாக சென்று சேகரிடம் தான் முதலில் கூறினாள். தன் நன்றியையும் தெரிவித்தாள்.ஏனென்றால் அவன் தான் பல வகையில் ஸ்வேதாவுக்கு உதவி செய்தான்.
அடுத்த நாளும் வந்தது......மனதைரியமும் ,துணிச்சலும் ,நம்பிக்கையும் ஸ்வேதாவுடன் கை கோர்த்து கொண்டன .... தன் கிளாஸ் ஐ நன்றாக எடுத்து முடித்தாள்.தனக்கே ஒரு நிறைவு வர ....நாம் இதே போலவே தொடர வேண்டும் என்று நினைத்து கொண்டாள் .கோபாலனும் ஸ்வேதாவை அழைத்து "Good Improvement Keep it Up" என்று சொல்ல ....மிகவும் ஆனந்தம் அடைந்தாள்.சென்டரில் பல பேர் வேலை பார்த்தாலும் சேகர் தான் அவளுக்கு நல்ல நண்பன். எனவே ,தான் இப்படி மாற உதவிய அவருக்கு எதாவது செய்ய
வேண்டும் என்று நினைத்தாள்.
சேகருக்கு ஒரு நல்ல பரிசு வாங்கி தர எண்ணினாள்.என்ன வாங்கி தருவது என்றே அவளுக்கு ஒரே குழப்பம் ........கடைக்கு சென்று பல பரிசு பொருள்களை பார்த்தாள்....அங்கு அவள் கண்ணுக்கு அழகிய கைகடிகாரம் தென்பட்டது ......இது தான் சரியான கிப்ட் என்று தோன்ற...ஸ்வேதா உடனே அதை வாங்கினாள்.
நாம் எப்படியும் நாளை இதை சேகரிடம் கொடுத்து விட வேண்டும் என்று மனதில் நினைத்து கொண்டு வீட்டிற்கு சென்றாள். மறுநாள் காலை சென்டர்க்கு புறபட்டாள்.பேருந்தில் வரும் போது ,தான் கிப்ட் கொடுத்தால் அதை சேகர் ஏற்று கொள்வாரா ....தன்னை தவறாக நினைப்பாரா என்ற கேள்வி அவளை குழப்பியது.....

06 December 2009

தெளிவான முடிவு 4

கோபாலன் இன்னும் கடுமையாக தொடர ..ஸ்வேதா அமைதியாக இருந்தாள்.
கடைசியாக அவர் " நீங்க ஒரு மாதத்தில் உங்க communication skill ஐ develop செய்யுங்கள் ,உங்களுக்கு தெரிந்த இங்கிலீஷ் எ க்ராம்மரோடு பேச பழகுங்கள் , 1 Month தான் டைம் உங்களுக்கு இருக்கு ....நீங்க உங்களையே தயார் செஞ்சுகோங்க அதுவரைக்கும் சென்டர்ல மத்த வேலை ய பாருங்க " என்றார்.
ஸ்வேதா ஒன்றும் பேசாமல் ,மன பாரத்துடன் வந்தாள்.சேகரிடம் நடந்தவற்றை கூறினாள்.சேகர் அவளிடம் " கவலை படாதிங்க மேடம்...இது நடப்பது சகஜம் தான் ...உங்கள போல் தான் நானும் இருந்தேன் ....நீங்க டெய்லி இங்கிலீஷ் newspaper read பண்ணுங்க ,என்னுடனும் இங்கிலீஷ் ல பேசுங்க ... உடனே English இல் Expert ஆகிடலாம் " என்றார். ஸ்வேதாவுக்கு சேகர் சொன்னது ஆறுதலாக இருந்தது.அவள்,தன்னை பற்றி நினைத்து கேவலபட்டாள்.8th std படிக்கும் மாணவர்களுக்கு தெரிந்த கிராம்மர் கூட எனக்கு தெரியலை என்று தன்னை தானே நொந்து கொண்டாள்.
அவளை சொல்லி குற்றமில்லை ....அவள் படித்து வளர்ந்தது எல்லாம் திருச்சி யில் உள்ள சிறிய கிராமத்தில் .....கல்லூரி மட்டும் தான் திருச்சியில் படித்தாள்.குடும்ப வறுமையில் தான் சென்னை என்றாலும் பரவாயில்ல வேலைக்கு செல்ல வேண்டும் என்ற வைராக்கியத்தில் அக்கா தயவால் வந்தாள்.
தன்னை போல இன்னும் நிறைய தோழிகள் இவளை விடவும் மோசமாக இங்கிலீஷ் பேசும் நண்பர்களும் உள்ளனர் ....இவளாவது சென்னை வந்து வசிக்கும் வாய்ப்பு கிடைத்தது....ஆனால் மற்றவர்களுக்கு அதற்கு கூட வழி இல்லை.
ஸ்வேதாவுக்குஅங்கு இருக்கவே புடிக்கவில்லை....உடனே வீட்டுக்கு செல்ல வேண்டும் போல இருந்தது ...ஆனால் ஒரு மாதத்திற்கு தான் என்ன செய்ய வேண்டும் ....எப்படி தன்னை தயார் செய்ய வேண்டும் ...என்ற கவலையில் ஆழ்ந்தாள் .....





05 December 2009

தெளிவான முடிவு 3

அதுவரை அமைதியாக இருந்த பசங்க வாயை கைகளால் மூடி சிரிக்க ஆரம்பித்தார்கள் .ஸ்வேதாவுக்கு என்னவோ போல் ஆகி விட்டது.நன்றாக தானே பேசுகிறோம் இதற்கே இப்படி சிரிக்கிறார்கள் !!! என்று நினைத்தாள்.இதை பார்த்த கோபாலன் முகம் சுளித்தார் .ஒரு வழியாக கணிப்பொறியை நோக்கி திரும்பி..." I pressing start ...mouse clicking.....going to ms-office .....mouse clicking....opening document என்று சொன்னாள். இன்னும் சிரிப்பு பலமாக கேட்டது....ஸ்வேதாவுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்ல ...."சட் அப் யுவர் மௌத்ஸ் ....... டோன்ட் லாப்பிங் " என்று சற்று கடினமாகவே சொன்னாள் . இதை கவனித்து கொண்டிருந்த கோபாலன் மாணவர்களிடம் "Keep quiet and listen to her" என்றார்......எப்படியோ தட்டு தடுமாறி அரை மணிநேரத்தை ஓட்டினாள். பத்து மணி ஆனதும் "டுடே கிளாஸ் பினிஷ் ....டுமாரோ கிளாஸ் ஸ்டார்ட்" ..... என்றாள்.
அந்த அஞ்சு பசங்களும் இவளை கொஞ்சம் நக்கலாக பார்த்துவிட்டு "thank you mam" என்று சொல்லி விட்டு சென்றார்கள்.ஸ்வேதாவுக்கு ஒரு மலையை கடந்தது போல் இருந்தது....அங்கு கோபாலன் வந்து...."Swetha come to my room immediately" என்றார்.
ஸ்வேதா வுடனே சென்டர் ஹெட் ரூம்க்கு போனா. அப்போ கோபாலன் அவளை கண்ட படி திட்ட ஆரம்பித்தார் ..... " இந்த சென்டர்ல உங்கள இண்டர்வ்யு இல்லாம செலக்ட் பண்ணேன் ,அதற்கு முக்கிய காரணம் உங்க அக்கா தான்...அவுங்க சொன்னாங்க ன்னு தான் உங்கள நேர்ல கூட பார்காம திருச்சி ல இருந்து வர சொன்னேன் ....உங்க மார்க் ,படிப்பு எல்லாம் மனதில் வைத்து செலக்ட் பண்ணேன்...ஆனா என்னம்மா இங்கிலீஷ் எ இப்படி கொல்றீங்க..
இன்னும் கொஞ்சம் கிராம்மர் ஐ நல்லா படிச்சுருக்க கூடாதா" என்று தொடர்ந்தார் .......ஸ்வேதா வேர்க்க விருவிருக்க சிலை போல கோபாலனை பார்த்து கொண்டிருந்தா......

தெளிவான முடிவு 2

இரவெல்லாம் தூங்காமல் தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் தன்னையே ரெடி பண்ணினாள். காலை, அவசரமாக எழுந்து கிளம்பி திரும்பவும் தனக்கு தெரிந்ததை சொல்லி பார்த்தாள். Exam க்கு போகும் மாணவனை போல் ஒரு வித நடுக்கத்துடனே சென்டர் நோக்கி சென்றாள்.
நேற்று போலவே இன்றும் சேகர் தான் வரவேற்றான் .அவன் அவளிடம் "நீங்க 8th std students க்கு எடுக்கனுங்க " என்று சொன்னான்.ஸ்வேதாவுக்கு கொஞ்சம் சந்தோசம்...."அப்பாடா நம்ம விட சின்ன பசங்க தானே" என்று மனதிற்குள் சொல்லி கொண்டாள் . 9 .30 மணிக்கு அஞ்சு பசங்க வந்தாங்க.அவளும் தனக்கு கொடுத்த ரூமில் அமர்ந்து கம்ப்யூட்டர் switch on செய்தாள்.
5 சிறுவர்களும் ஒன்றும் தெரியாத அப்பாவிகள் போல் தோற்றமளித்தார்கள்.
அவர்கள் அமைதியாக அமர்ந்தார்கள்.இப்போது ஸ்வேதாவுக்கு கொஞ்சம் தைரியமும் நம்பிக்கையும் சேர்ந்து இருந்தது. அப்போது சென்ட்டர் ஹெட் கோபாலன் வந்து..."Please introduce yourself to students and continue the class" என்று சொல்லி விட்டு ஸ்வேதா வின் அருகில் அமர்ந்தார்.இதை சற்றும் எதிர்பார்க்காத ஸ்வேதாவுக்கு ஒரே பதட்டம்...
ஸ்வேதா, "முருகா இது என்ன சோதனை....இவருக்கு முன்னாள் நான் நன்றாக எடுக்கணும் நீ தான் காப்பத்தனும் " என்று முனுமுனுத்தாள் ... Ok start என்று ஹெட் சொல்ல... தட்டு தடுமாறி...My name is Swetha....My father name is Rajaram,My mother name is Sakunthala..I am studied in trichy..yesterday come in chennai.. I am stayed at sister's home.I will take class ms-office to you today.... என்று மடமடவென முடித்தால்..........

03 December 2009

தெளிவான முடிவு 1

ஸ்வேதா சென்னைக்கு புதுசு ...திருச்சி யில் இருந்து நேற்று தான் சென்னைக்கு வந்தாள். அவளது அக்காவின் தயவில் சென்னையில் ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் வேலை கிடைத்துள்ளது.சென்னை பற்றி அதிகம் தெரியாது.....
இன்று முதல் நாள்...கம்ப்யூட்டர் சென்டர்க்கு சீக்கிரமே சென்றாள்.
ஒரு வித பயத்துடனும் தயக்கத்துடனும் கதவை திறந்தாள்.அவளை புன்சிரிப்புடன் வரவேற்றான் சேகர் .சேகரும் அதே சென்டர்ல ஒரு
வருஷமா வேலை பார்க்கிறான்... அவன் அவளை பற்றி விசாரிக்க ஆரம்பிக்க அவளும் சகஜமாக பேச தொடங்கினாள்.
சென்டர் ஹெட் வந்து appointment letter கொடுத்தார் ....ஸ்வேதாவுக்கு எல்லை இல்லாத சந்தோசம்...முதல் வேலை முதல் நாள் சென்னை என்று மகிழ்ச்சியில் மிதந்தாள் .சேகர் , அவள் செய்ய வேண்டிய வேலை விவரங்களை சொல்லி கொடுத்தான்.அவளுடைய Job "faculty " தான்.என்ன அவளுக்கு english சரளமாக வராது !! அவளுடைய தோழிகள் முன்பே அவளிடம் சொல்லி இருந்தது ஞாபகம் வந்தது.....சென்னைல english kku தான் முதலிடம்...ஸ்வேதா படித்தது தமிழ் மீடியம்....காலேஜ் மட்டும் தான் இங்கிலீஷ் மீடியம் ......கஷ்டப்பட்டு படிச்சு எப்படியோ பாஸ் ஆயிட்டா .
சேகர் ,அவளிடம் நாளைக்கு நீங்க MS-OFFICE எடுக்க வேணும்னு சொன்னாரு...ஸ்வேதாவுக்கு கம்ப்யூட்டர் பத்தி தெரிந்திருந்தாலும்
"இங்கிலீஷ்" ல சொல்லி கொடுக்கணுமேன்னு ஒரே பயம்.......நாளைக்கு என்ன பண்றதுன்னு இன்னைக்கே யோசிக்க ஆரம்பிச்சிட்டா