ஸ்வேதாவும் அவனை பின்தொடர்ந்தாள்.எல்லா ரூமையும் காண்பித்துவிட்டு ,பால்கனி இல் நின்றார்கள் . அப்போது தான் இருவரும் நேருக்கு நேர் பார்த்து கொண்டார்கள்.சுனில் ,"இப்போ இங்க யாரும் இல்ல ,இப்பயாவது சொல்லுங்க என்னை உங்களுக்கு புடிச்சிருக்கான்னு ? உங்க மெசேஜ் நேத்து கிடைச்சுது ,உங்களுக்கு கால் பண்ண தான் நினைத்தேன் ,ஆனா வீடு விசயத்தில மறந்துட்டேன் .எப்படியும் இன்னைக்கு கேட்ரனும்னு முடிவு பண்ணேன் ,சொல்லுங்க ஸ்வேதா ....எங்க அம்மா அப்பாவ பார்த்திருபீங்க ,அவர்களை அன்பாய் பார்த்து கொள்ளவும் என்னையும் நன்றாக புரிந்து கவனித்து கொள்ளவும் நல்ல பெண்ணை தேடி கொண்டிருக்கிறேன். இந்த வீடு உங்களுக்கு புடிச்சிருக்கா ?" என்று அவன் அடுக்கி கொண்டே போக ,ஸ்வேதாவுக்கு தலை கால் புரியவில்லை .....
ஸ்வேதாவும் கொஞ்சம் தைரியம் வந்தவளாய் ,"சுனில் நீங்க தான் சொல்லணும் ,பெண் பார்க்க வருபவர்கள் தான் பெண்ணை பிடிச்சிருக்கா பிடிக்கலையா ன்னு சொல்லுவாங்க ,நீங்க அன்னைக்கும் இதே கேள்விய தான் கேடீங்க ,இன்னைக்கும் கேட்குறீங்க ,நீங்க முதல்ல சொல்லுங்க நான் சொல்லறேன் " என்றாள் ."ஒ.கே ஸ்வேதா ,இதில் மறைபதற்கு ஒன்றும் இல்லை , உங்கள எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ,உங்கள பிடிக்கலன்னா ,நான் இப்படியா உங்க கிட்ட கேட்டுகிட்டு இருப்பேன் ? நீங்க புரிஞ்சிகுவீங்கன்னு பார்த்தேன் ...இருந்தாலும் என் வாயால சொல்ல வச்சுடீங்க ...இப்பயாச்சு நீங்க சொல்லுங்க " என்றான்.
ஸ்வேதா சந்தோஷத்தில் ,"எனக்கும் உங்களை புடிச்சிருக்கு ,நீங்க இந்த பதில அன்றே சொல்லி இருக்கலாம் ,நான் ரெண்டு நாளா இதை நினைத்து குழம்பி போய்ட்டேன்." என்று மனதில் பட்டதை சொன்னாள்.சுனில் ," ஸ்வேதா
I am so happy today,இன்னைக்கே அம்மா அப்பா கிட்ட நம்ம கல்யாணத்த பத்தி பேச போறேன் .....நீங்களும் உங்க அக்க மாமா கிட்ட சொல்லிடுங்க ....நாலைக்கு 6 மணிக்கு உங்கள சென்டர் வந்து பார்கிறேன் " என்றான் ."நம்ம போல உள்ள சுமாரான பொண்ணுக்கு ,சுனில் மாதிரி அழகான ஒருத்தேன் பேசுறதே பெருசு ..அதிலும் இப்படி நம்மை பார்த்து வலிய வந்து திருமணம் செஞ்சுக்க போரேன்னு சொன்னா .......ஸ்வேதா நீ கொடுத்து வைத்தவள் "என்று தன மனதிற்குள் சொல்லி மகிழ்ந்தாள் .
அங்கு வந்த சுதா ,"இந்த வீடு ரொம்ப நல்லா இருக்கு ,நல்ல location ,நல்லா கட்டி இருக்காங்க எவ்ளோ ஆச்சு சுனில் ?"என்று கேட்க ,சுனில் பதிலாக ," registration எல்லாம் சேர்த்து 30 lakhs ஆச்சு ,நல்ல பில்டர் ன்னு எல்லோரும் சொன்னாங்க ,Documents எல்லாம் பக்காவா இருந்தது அதான் ஆபீஸ் ல லோன் எடுத்து உடனே முடிச்சிட்டேன் " என்றான். "சரி சுனில்,ஆபீஸ் க்கு லேட் ஆச்சு ,நாங்க கிளம்புறோம் ..நீங்க அம்மா அப்பாவ கூட்டிட்டு அவசியம் எங்க வீட்டுக்கு வரணும் " என்று சுரேஷ் சொல்லி புறப்பட்டான் ,சுதாவும் ஸ்வேதாவும்
அவனை தொடர்ந்தார்கள் .
Hello world!
-
Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then
start writing!
3 years ago