04 January 2010

தெளிவான முடிவு 10

ஸ்வேதாவுக்கு டென்ஷன் அதிகம் ஆனது.மணி 3.05 இருக்கும் ,யாரோ வந்து கதவு தட்டுவது கேட்டது. ஸ்வேதாவை உள்ளறையில் அமர வைத்து விட்டு சுதா வேகமாக சென்று கதவை திறந்தாள். அவள் எதிர்பார்த்தது போல அங்கு மாப்பிள்ளை மற்றும் சுதாவின் கணவர் சுரேஷ் நின்றிருந்தார்கள்.சுதா ," உள்ள வாங்க உட்காருங்க " என்று சொன்னாள்.சுரேஷ் சுதாவிடம் ," சுதா இவர் பெயர் சுனில் ...இவர் சாப்ட்வேர் கம்பனில Programmer ஆ இருக்கார் ..இவருடைய நண்பருக்கு அவசர வேலை வந்துரிச்சு ,அதனால தான் நானும் சுனிலும் வந்தோம் " என்று சொன்னார்.
சுதாவுக்கு சுனிலை பார்த்ததும் புடித்து விட்டது.ஸ்வேதா சுமாரான அழகு தான் ..ஆனால் சுனிலை பார்த்து யாரும் பிடிக்காது என்று சொல்ல முடியாது .மாநிறமாக இருந்தாலும் அழகாக இருந்தான் .படிய வாரிய தலையுடன் சிரித்த முகத்துடனும் , அவன் இருப்பதை பார்த்த சுதாவுக்கு ஒரு சின்ன அச்சம் .இவனுக்கு நம்ம ஸ்வேதாவை புடிக்குமா என்று ??....
சுதா சுனிலிடம் ," நீங்க இங்க வந்து ஸ்வேதாவை பார்கிறது சந்தோசம் தான் ,உங்க அம்மா அப்பாவையும் கூட்டிட்டு வந்திருக்கலாம் ..." என்று இழுத்தாள்.
அதற்கு சுனில் ," எங்க அம்மா அப்பா என்னோட இஷ்டத்துக்கு குறுக்கே நிக்க மாட்டாங்க ...மேலும் அவர்களுக்கு வயசாகி விட்டது ,ஒவ்வொரு வீட்டுக்கு சென்று பார்த்து வர அவர்களால் முடியாது ....நான் ஒரே பையன் ..அவர்களுக்கு திருமணமாகி பல வருஷம் கழித்து தான் பிறந்தேன்.. அதனால தான் ,நான் அவுங்க கிட்ட சொல்லிட்டேன் ,நான் போய் பெண் பார்த்துட்டு வரேன் ...எனக்கு பிடிச்சிருந்த நாம மேற்கொண்டு பேசலாம்னு "
என்று அவன் பேச பேச ,ஸ்வேதாவுக்கு அவனை பார்க்க வேண்டும் என்ற ஆசை உருவானது ...சுரேஷ் ," சரி சுதா சும்மா பேசிட்டு இருக்காத ...இது நம்ம வீடு இல்ல ...அவரும் ஸ்வேதாவை பார்த்து விட்டு ஆபீஸ் போகணும் நானும் போகணும் ,சீக்கிரம் ஸ்வேதாவை கூப்பிடு " என்றான்.
சுதா, ஸ்வேதா இருக்கும் அறைக்கு சென்று ஏற்கனவே அவள் வாங்கி வைத்து இருந்த fanta வை glass இல் ஊற்றி ஸ்வேதா கையில் கொடுத்தாள். ஸ்வேதாவும் பல வித பயத்துடனும் தயக்கத்துடனும் , எதிர்பார்போடும் சுனிலை நெருங்கினாள் . அவனை பார்த்ததும் ஸ்வேதாவுக்கு பிடித்து போனது ... ஒரு புன்சிரிப்புடன் fanta வை கொடுக்க..அவனும் thanks என்று பெற்று கொண்டான் . ஸ்வேதா ஒரு வித பதட்டத்துடனே நின்றாள்..நம் கனவு நாயகன் இவன் தான் என்ற எண்ணம் அவளுக்கு அரும்பியது .
சுனில் ஸ்வேதாவை பார்த்துவிட்டு ," சுரேஷ் நான் ஸ்வேதா ட்ட கொஞ்ச நேரம் தனியா பேசணும்னு நினைக்கிறேன்" என்று கேட்டான். சுதாவும் சுரேஷும் ஒருவரை ஒருவர் பார்த்து விட்டு சரி,"நாங்க வெளிய இருக்கோம் ,நீங்க பேசி விட்டு வாங்க "என்றார்கள் .