19 January 2010

தெளிவான் முடிவு 25

சரஸ்வதி சுதாவிடம் ,"நீ வந்த போதே கேட்கனும்னு இருந்தேன் ,என் பேத்தி சுர்யாகுட்டி எங்க ? எப்படி இருக்கா என் பேத்தி ?" சுதா ,"நல்லா இருக்கா மா,அவளை என் பிரின்ட் வீட்ல விட்டுட்டு தான் வந்தேன் ,நாம போகும் போது அப்படியே கூட்டிகிட்டு போயிடலாம் " என்று சொன்னாள்.

சுரேஷும் சுனிலும் உள்ளே வந்தார்கள். சுனில் ,"சரி மா நான் கிளம்புரேன் , உடம்ப பாத்துகோங்க ,நாளைக்கு வீட்டில் வந்து பார்கிறேன்" , என்று சரஸ்வதியிடம் சொல்லிவிட்டு , ஸ்வேதா நான் வரேன் என்று சொல்லி கிளம்பினான். இவர்களும் ஹாஸ்பிடல் விட்டு கிளம்பி ,சூர்யாகுட்டியை அழைத்து , வீடு வந்து சேர்ந்தார்கள்.

சுரேஷ் ,"அத்த எப்படி எங்க selection ,சுனில உங்களுக்கு புடிச்சிருக்கா? " என்று கேட்க சரஸ்வதி ,"அந்த தம்பி என்னை முன்ன பின்ன தெரியாட்டாலும் ,ஆஸ்பத்திரி யில் வந்து பார்த்ததும் பேசிய விதமும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ,இனிமே தள்ளி போட வேணாம் , சுனிலின் அம்மா அப்பாவ நம்ம வீட்டுக்கு வர சொல்லுங்க ,நாளைக்கே இத பத்தி பேசிடலாம்"
என்றாள்.தன் நிலைமையை கூட மறந்து சரஸ்வதி தன் மகளின் எதிர்காலத்தை பற்றி இவ்வாறு முடிவெடுக்க வைத்தது சுனிலின் நடவடிக்கை.

சுதா ,"ஆமா மா ,நீ சொல்றதும் சரி தான் .நாம சீக்கிரமே முடிவெடுக்கணும் . இவ்வளவு சீக்கிரம் ஸ்வேதாவுக்கு திருமணம் கூடி வரும் ன்னு நான் நினைக்கல,ஸ்வேதா அதிர்ஷ்டசாலி தான் ... முதல்ல வேலை கெடச்சது உடனே திருமணமும் அமைய போகுது " என்று ஆனந்தபட்டாள்.சுரேஷும் ,"சரி அத்த ,நான் சுனிலின் அம்மாவுக்கு நாளைக்கு போன் பண்ணி நல்லநேரம் பார்த்து வர சொல்லறேன் " என்றான் .

இவ்வாறு அனைவரும் மகிழ்ச்சியாக பேசி கொண்டிருக்க ,ஸ்வேதா மட்டும் தன் அறையில் இங்கும் அங்குமாக நடந்து கொண்டிருந்தாள். "சேகர் சொல்லியதால் தான் இவ்வளவு பிரச்சனை எனக்கு ...அவன் சொல்லாமல் இருந்தால் ,எவ்வளவு நல்லா இருக்கும் .... நாம சேகரிடம் என்ன சொல்லலாம் ? சுனிலையே திருமணம் செய்து கொள்ளலாமா ? அம்மாவிடம் இவ்வாறு நடந்ததை சொல்லி யோசனை கேட்கலாமா ? எனக்கு பைத்தியமே பிடிச்சிடும் போல இருக்கு " என்று தனக்குள்ளே பேசி நொந்து கொண்டாள்.

தெளிவான முடிவு 24

மாலை 6 மணி இருக்கும் ,சுதாவும் சுரேஷும் வந்தார்கள் .டாக்டரிடம் மூவரும் போய் பேசினார்கள்... இரவு 8 மணிக்கு சரஸ்வதியை டிஸ்சார்ஜ் செய்யலாம் என்று டாக்டர் கூறினார் .இதை கேட்ட அனைவருக்கும் சந்தோசம் .சுரேஷ் ஹாஸ்பிடல் பில்லை கட்ட சென்றார் .சுதாவும் , ஸ்வேதாவும் சரஸ்வதியின் அருகில் அமர்ந்திருந்தார்கள்.

அப்போது கையில் பழங்களுடன் சுனில் வந்தான்.இதை சற்றும் எதிர்பார்க்காத ஸ்வேதா ஆச்சர்யமாய் சுனிலை பார்த்தாள் .
சுதா ,"வாங்க சுனில்...உங்களுக்கு எப்படி தெரியும் ,நாங்க இங்க இருக்கோம் என்று ?ஸ்வேதா சொன்னாளா ?சுரேஷ் இப்போ வந்திடுவார் ..உட்காருங்க " என்றார் . சரஸ்வதி ,"யாரும்மா இந்த தம்பி?" என்று சுதாவை பார்த்து கேட்டார் . சுதா ,"இவர் தான் சுனில் மா ,நம்ம ஸ்வேதாவ இவருக்கு தான் பார்த்தோம்....நான் கூட போன்ல சொன்னேன்ல ,அவர் இவர் தான் ."என்று சொல்ல சுனில் சரஸ்வதியை பார்த்து வணங்கினான் .

"எப்படி இருக்கீங்க மா ,இப்போ பரவில்லையா ? ஸ்வேதா தான் சொன்னாங்க ,.அதான் அப்படியே உங்கள பார்த்து விசாரிச்சுட்டு போகலாம்னு வந்தேன் ....." என்று சுனில் சொல்ல சரஸ்வதி ,"ரொம்ப சந்தோசம் தம்பி, என்ன பார்க்க இவ்வளவு தூரம் வந்ததற்கு , நான் கொஞ்சம் பார்த்து இறங்கி இருந்தா இந்த அவஸ்தை எனக்கு இருக்காது ,வயசாயிடுச்சு என்ன பண்றது இதெல்லாம் சகஜம் தானே" என்று பேச ,சுனில் ,"நீங்க சொல்றது சரி தான் மா, உங்களுக்கு சீக்கிரமே குனமாகிடும் கவலை படாதீங்க .சுரேஷ் அறைக்குள் நுழைய ,"வாங்க சுனில் , ஏது இந்த பக்கம்? " என்று சொல்லி கை குலுக்கினான் .

சுனிலும் சுரேஷும் பேசி கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்து வெளியே சென்று பேசி கொண்டிருந்தார்கள்.. சரஸ்வதி சுதாவிடம் ,"நீ கூட போன்ல சொன்ன போது நம்பல ,சுனில் நல்லா இருக்கான் சுதா ,ஸ்வேதாவுக்கு ரொம்ப பொருத்தமா இருப்பான் .,அவன் என்னை இங்க வந்து பார்த்ததும் அனுசரனையா பேசுறதும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு .
நல்ல பையனா தெரியுறான் ...இவனையே ஸ்வேதாவுக்கு பேசி முடிச்சிடலாம் "
என்று மகிழ்ச்சியாய் சொன்னாள். ஸ்வேதா இதை கேட்டதும் .,மகிழ்ச்சியாய் இருப்பதா , கவலை படுவதா என்று அவளுக்கே தெரியவில்லை...