19 January 2010

தெளிவான முடிவு 24

மாலை 6 மணி இருக்கும் ,சுதாவும் சுரேஷும் வந்தார்கள் .டாக்டரிடம் மூவரும் போய் பேசினார்கள்... இரவு 8 மணிக்கு சரஸ்வதியை டிஸ்சார்ஜ் செய்யலாம் என்று டாக்டர் கூறினார் .இதை கேட்ட அனைவருக்கும் சந்தோசம் .சுரேஷ் ஹாஸ்பிடல் பில்லை கட்ட சென்றார் .சுதாவும் , ஸ்வேதாவும் சரஸ்வதியின் அருகில் அமர்ந்திருந்தார்கள்.

அப்போது கையில் பழங்களுடன் சுனில் வந்தான்.இதை சற்றும் எதிர்பார்க்காத ஸ்வேதா ஆச்சர்யமாய் சுனிலை பார்த்தாள் .
சுதா ,"வாங்க சுனில்...உங்களுக்கு எப்படி தெரியும் ,நாங்க இங்க இருக்கோம் என்று ?ஸ்வேதா சொன்னாளா ?சுரேஷ் இப்போ வந்திடுவார் ..உட்காருங்க " என்றார் . சரஸ்வதி ,"யாரும்மா இந்த தம்பி?" என்று சுதாவை பார்த்து கேட்டார் . சுதா ,"இவர் தான் சுனில் மா ,நம்ம ஸ்வேதாவ இவருக்கு தான் பார்த்தோம்....நான் கூட போன்ல சொன்னேன்ல ,அவர் இவர் தான் ."என்று சொல்ல சுனில் சரஸ்வதியை பார்த்து வணங்கினான் .

"எப்படி இருக்கீங்க மா ,இப்போ பரவில்லையா ? ஸ்வேதா தான் சொன்னாங்க ,.அதான் அப்படியே உங்கள பார்த்து விசாரிச்சுட்டு போகலாம்னு வந்தேன் ....." என்று சுனில் சொல்ல சரஸ்வதி ,"ரொம்ப சந்தோசம் தம்பி, என்ன பார்க்க இவ்வளவு தூரம் வந்ததற்கு , நான் கொஞ்சம் பார்த்து இறங்கி இருந்தா இந்த அவஸ்தை எனக்கு இருக்காது ,வயசாயிடுச்சு என்ன பண்றது இதெல்லாம் சகஜம் தானே" என்று பேச ,சுனில் ,"நீங்க சொல்றது சரி தான் மா, உங்களுக்கு சீக்கிரமே குனமாகிடும் கவலை படாதீங்க .சுரேஷ் அறைக்குள் நுழைய ,"வாங்க சுனில் , ஏது இந்த பக்கம்? " என்று சொல்லி கை குலுக்கினான் .

சுனிலும் சுரேஷும் பேசி கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்து வெளியே சென்று பேசி கொண்டிருந்தார்கள்.. சரஸ்வதி சுதாவிடம் ,"நீ கூட போன்ல சொன்ன போது நம்பல ,சுனில் நல்லா இருக்கான் சுதா ,ஸ்வேதாவுக்கு ரொம்ப பொருத்தமா இருப்பான் .,அவன் என்னை இங்க வந்து பார்த்ததும் அனுசரனையா பேசுறதும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு .
நல்ல பையனா தெரியுறான் ...இவனையே ஸ்வேதாவுக்கு பேசி முடிச்சிடலாம் "
என்று மகிழ்ச்சியாய் சொன்னாள். ஸ்வேதா இதை கேட்டதும் .,மகிழ்ச்சியாய் இருப்பதா , கவலை படுவதா என்று அவளுக்கே தெரியவில்லை...

No comments:

Post a Comment