08 January 2010

தெளிவான முடிவு 14

எப்படியோ சமாளித்து சேகரை அனுப்பினாள்.சுனிலிடம் பேசுவதற்கு இந்த இடம் சரி பட்டு வராது என்று தோன்றியது ஸ்வேதாவுக்கு . ஒரு ஐடியா தோன்ற .."சுனில் என்னால் இன்று உங்களிடம் பேச முடிய வில்லை .
சோ சாரி நீங்கள் 6.30 மணிக்கு மேல் எனக்கு போன் செய்யுங்கள் " என்று மெசேஜ் செய்தாள். அவள் மனமெல்லாம் சுனிலை பற்றிய நினைவு தான்.நல்ல சந்தர்ப்பம் அமைந்தும் நம்மால் பயன்படுத்த முடியவில்லையே .....என்று அவளுக்குள் குமுற ஆரம்பித்தாள்.

மாலை 6.30 எப்போது வரும் என்று தன் கை கடிகாரத்தை உற்று பார்த்து பார்த்து சோர்ந்து போனாள்.சீக்கிரமாகவே சென்டர் ல இருந்து புறப்பட்டு வீடு சென்றாள். 6.30 மணியும் ஆனது ...ஆனால் சுனிலிடமிருந்து எந்த போன் காலும் வரவில்லை. மிகவும் எதிர்பார்ப்புடன் இருந்த அவளுக்கு ஏமாற்றம் தான்."தன்னை தவறாக நினைத்து விட்டாரோ " என்று தான் அவளுக்கு தோன்றியது .

எப்படியும் போன் கால் வரும் என்று தன் மொபைல் ஐ கையிலே வைத்து கொண்டிருந்தாள் .மணி 7.15 இருக்கும் ,வீட்டில் அழைப்பு மணி ஒலிக்க
ஸ்வேதா போய் கதவை திறந்தாள்.அவளுக்கு இன்ப அதிர்ச்சி .

மாமா சுரேஷும் சுனிலும் அங்கு நின்றிருந்தார்கள்.
அக்கா அக்கா , மாமா மாமா என்று சொல்லி கொண்டே வீட்டின் உள்ளே சென்றாள். சுரேஷும் சுனிலும் சோபா வில் அமர ,சுதா வந்தாள்."என்ன சுனிலும் நீங்களும் ஒன்னா வந்திருக்கீங்க ? சுனில் வராருன்னு முன்பே சொல்லி இருந்தா dinner எதாவுது prepare பண்ணி இருப்பேனே ?என்றாள்.

சுனில் ,"நான் உங்க எல்லோரையும் invite பண்ண வந்திருக்கேன் .நான் தாம்பரத்ல ஒரு flat வாங்கி இருக்கேன் .நாளை காலை கிரகப்ரவேசம் வச்சிருகோம் ,நீங்க எல்லோரும் அவசியம் வரணும் ..உங்க வீடு எனக்கு தெரியாது ,அதனால சுரேஷுக்கு போன் செய்ஞ்சு அவரோட வந்தேன்.. நான் நேர்ல வந்து உங்களை அழைக்கணும்னு ஆசைப்பட்டேன் " என்றான்.

"காபி டீ யாவது குடிச்சுட்டு போங்க " என்று சுதா கேட்க ."இல்லேங்க இன்னும் பலரை கூப்பிட வேண்டி இருக்கு ,நான் கிளம்பறேன் " என்று சொல்லி அவர்கள் வீட்டை விட்டு சென்றான்.தன் அறையில் இருந்த ஸ்வேதா ஜன்னல் வழியாக பார்த்து கொண்டிருந்தாள் .