12 February 2010

அன்புள்ள அண்ணி 8

ப்ரீதா வீட்டிற்குள் வர, அவள் அம்மா மாலா ," வா ப்ரீதா ,களைப்பா இருப்ப ,நான் காபி போட்டு தரட்டுமா " என்று கேட்டாள்.அதை எதையும் காதில் வாங்காமல் ...நேராக தன் அறை சென்று மீனாவின் மொபைல் க்கு போன் செய்தாள்.ஆனால் மீனாவின் மொபைல் சுவிட்ச் ஆப் மோடில் இருந்தது.ப்ரீதாவின் டென்ஷன் அதிகம் ஆனது ....அங்கும் இங்கும் நடக்க ஆரம்பித்தாள்இதனை கண்ட மாலா ," என்ன அச்சு உனக்கு ,நான் இங்க பேசிட்டு இருக்கேன்...நீ என்னை கண்டுக்காம போற ...என்ன டென்ஷன் ,ஆபீஸ்ல எதாவது நடந்துச்சா ?" என்று கேட்டாள்.
"அதெல்லாம் ஒன்னும் இல்லமா ...என் தோழி மீனா உனக்கு தெரியும் ல அவளுக்கு தான் போன் ட்ரை பண்ணிட்டு இருந்தேன்....அவளபிடிக்க முடியல அதான் "......என்று சொன்னாள் ப்ரீதா.

ப்ரீதாவுக்கு ,சத்யா கூப்பிட்டதே நினைவில் நின்றது ...ஏன் அவன் என்னிடம் தனியா பேசணும் என்றான் ....என்ற கேள்வி தான் அவள் மனதிற்குள்.....
"நாம ஏன் அங்க போகணும்,சத்யா கூப்பிட்டா நாம போகனுமா....போக வேண்டாம்....என்ன நடக்குதுன்னு பார்போம் என்று ஒரு மனதும்
நாம நாளைக்கு போனா தான் என்ன ,அவன் என்ன சொல்றான்னு பார்போம் என்று மற்றொரு மனதும் மாறி மாறி துன்புறுத்தியது..... காலையில் சீக்கிரமே ஆபீஸ் சென்றாள்.

மீனா எப்படியும் இன்று ஆபீஸ் வருவாள்.அவளிடம் சென்று கேட்போம் ,என்று நினைத்தவளுக்கு ஏமாற்றமே ...அன்று மீனா வரவில்லை . ப்ரீதா ,மீனாவின் மொபைல் க்கு மீண்டும் டயல் செய்தாள் ....அதே சுவிட்ச் ஆப் இல் இருந்தது .வேலையில் சேர்ந்த இரண்டாவது நாளில் லீவ் எடுத்திருக்கிறாள்.,அதுவும் யாரிடமும் எதுவும் சொல்லாமல்....என்று மீனாவின் மேலே ப்ரீதாவுக்கு கோபம் மேலோங்கியது .அன்று முழுவதுமே அவளால் முழு மனதுடன் வேலையில் ஈடுபட முடியவில்லை.அவள் ஒரு முடிவுக்கு வந்தாள் . இன்று மாலை எப்படியும் சத்யாவை சந்தித்து விட வேண்டும் .....அவன் ஏதாவது தவறாக நடக்க முயற்சித்தால் , நாம் போலீசிடம் தெரிவிக்கலாம் ...தைரியமாக இருக்க வேண்டும் ...அவன் மீனாவின் நண்பன் அதனால் அவன் என்ன சொல்றான்னு கேட்போம் என்று முடிவு செய்தாள்.

தன் கை கடிகாரத்தையே பார்த்து கொண்டிருந்தாள் .மணி 5.30 ஆனதும் ....தன் கைபையை எடுத்து கொண்டு புறபட்டாள் .அன்று சென்ற அதே restaurant க்கு விரைந்தாள் .வெளியில் இருந்து பார்த்த போது சத்யா அவளுக்காக காத்திருப்பது தெரிந்தது.

11 February 2010

அன்புள்ள அண்ணி 7

மறு நாள் காலை எப்போதும் போல ஆபீஸ் சென்றாள் ப்ரீதா......மீனா அங்கு ஏற்கனவே வந்திருந்தாள்.ப்ரீதாவிடம் வொர்க் பற்றிய சந்தேகங்களை கேட்டு கொண்டிருந்தாள்.அப்போது ப்ரீதா ," மீனா நேத்து உன் நண்பர்னு ஒருத்தர அழைதிருந்தியே அவர் யாரு ? நேத்தே இத பத்தி உன்கிட்ட கேட்கனும்னு இருந்தேன் ......நம்ம காலேஜ் ,உன்னுடைய கிளாஸ்நீ அவனை பத்தி என்கிட்டே இதுவரை சொன்னதே இல்லையே?" என்று கேட்டாள் ......

"ஆமா ப்ரீதா ,சத்யா வ பத்தி உன்கிட்ட சொன்னது கிடையாது ....எங்க batch இல் நாங்க ரெண்டு பெரும் தான் ஸ்காலர்ஷிப் பணத்தின் மூலம் படித்தோம் ...அதன் மூலம் தான் ,நல்ல நண்பர்கள் ஆனோம்....யாரிடமும் அவன் பேச மாட்டான்.தானுண்டு தன் படிப்பு உண்டு என்று இருப்பான் ....அவனுடைய விடாமுயற்சி ,தன்னம்பிக்கை எனக்கு பிடிக்கும்.அவன பத்தி உன்னிடம் சொல்ல அவசியம் வரல,அதான் உன்கிட்ட சொல்லல...நம்ம கம்பனிக்கு அருகில் தான் அவன் வேலை பார்க்கும் கம்பெனியும் உள்ளது....அவன் ஞாபகம் வந்தது அதனால் தான் அவனை அழைத்தேன் "என்றாள் மீனா .

நேரம் செல்ல செல்ல ப்ரீதாவும் மீனாவும் தங்கள் வேலையில் மூழ்கினார்கள். அன்று மாலை வீட்டிற்கு கிளம்பி கொண்டிருந்த ப்ரீதாவுக்கு கைபேசியில் அழைப்பு வர ....பேசினாள்.மறுமுனையில் ,"ஹலோ நான் சத்யா பேசுறேன் .....எப்படி இருக்கீங்க ப்ரீதா ...மீனாகிட்ட தான் உங்க நம்பர் வாங்கினேன்...உங்க கிட்ட நான் கொஞ்சம் தனியா பேசணும் .......நாம ஏற்கனவே மீட் பண்ண restaurant க்கு நாளைக்கு மாலை ஆறு மணிக்கு வந்திடுங்க....." ப்ரீதா ,"ஹலோ சத்யா.......அது வந்து.......நேத்து தான் நாம மீட் பண்ணோம்....எனக்கு உங்கள யாருன்னே தெரியாது ....நான் எதுக்கு வரணும் ...பேசணும் ....சாரி நான் வர மாட்டேன் " என்று சொல்ல ,அவளை பேச விடாமல் சத்யா ,"நீங்க நாளைக்கு வரீங்க ப்ரீதா ,உங்களுக்காக நான் சரியா ஆறு மணிக்கு காத்திட்டு இருப்பேன் வச்சிடறேன்" என்று அழைப்பை துண்டித்தான்.

ப்ரீதாவுக்கு கோபம் எழுந்தது ...."இந்த மீனா ஏன் கண்டவுங்க கிட்ட என் நம்பரை கொடுக்குறா ?இப்போ அவன் பேசணும் வரணும்னு சொல்றான்....இது என்ன புது தொல்லை " என்று தனக்குள்ளே பேசி கொண்டு மீனாவை தேடினாள் ஆனால் அவள் அதற்குள் வீட்டிற்கு கிளம்பி விட்டாள்.சரி நாமும் வீட்டிற்கு சென்று அவளை போன் செய்து கேட்போம் என்று ப்ரீதாவும் வீட்டிற்கு கிளம்பினாள்.

10 February 2010

அன்புள்ள அண்ணி 6

அவர்கள் இருவரும் அமர, மீனா யாரையோ எதிர் பார்த்து கொண்டிருந்தாள் ??
இதை கவனித்த ப்ரீதா அவளிடம் ,"என்ன மீனா ஏன் அங்க பார்த்துட்டு இருக்கிற ...வேற யாராவது வர்றாங்களா? நாம ரெண்டு பேர் மட்டும் தான்னு நெனச்சுட்டு இருந்தேன் ......" என்றாள் .மீனா ,"ஆமா ப்ரீதா நான் முக்கியமான ஒருத்தர எதிர்பார்த்துட்டு இருக்கேன் .....என்னுடைய நலன் விரும்பி ,நல்ல நண்பன் என்று கூட வச்சுக்கோயேன் " என்றாள்.

மீனாவுக்கு இன்று மதியம் தான் வேலை கிடைத்தது ....restaurant போலாம் என்று அரை மணி நேரத்திற்கு முன்னர் தான் ப்ரீதா முடிவு செய்தாள்அதற்குள் இந்த மீனா யாரை இந்த ஹோட்டலுக்கு அழைத்தார்? என்று குழப்பத்துடன் இருந்தாள் ப்ரீதா. ப்ரீதாவுக்கு கோபம் வந்தது....." என்னடி யார் வர்றாங்க ...இப்ப சொல்லு நாம வந்து பத்து நிமிஷம் ஆச்சு.....நானும் சீக்கிரம் வீட்டிற்கு போகணும் ..அப்படி யாருக்கு தான் காத்துட்டு இருக்க ....நாம ஆர்டர் பண்ணிடலாம் உன் நண்பர் வந்தா ஜாயின் பண்ணிக்கட்டும் " என்றாள்.

அதோ வந்துவிட்டார் சத்யா ,"என்று மீனா கைகாட்ட ....ப்ரீதாவும் மெல்ல திரும்பினாள் . "வாங்க சத்யா உட்காருங்க ., இவள உங்களுக்கு தெரிஞ்சிருக்கும் ...ப்ரீதா ..உங்களுக்காக தான் காத்து கிட்டு இருந்தோம் " என்றாள் மீனா ....ப்ரீதாவுக்கு ஒரே குழப்பம் ,இவனை எங்கோ பார்த்தது மாதிரி இருக்கிறதே என்று யோசிக்க ஆரம்பித்தாள். "ஹாய் ப்ரீதா ....நான் சத்ய பிரகாஷ் ..என்ன எல்லோரும் சத்யானு கூப்பிடுவாங்க ...நான் மீனாவோட காலேஜ் மேட் ...மீனா உங்கள பத்தி நிறைய சொல்லுவா ...நானும் உங்கள கல்லூரில பார்பேன் .....ஆனா என்ன department வேற.......என்ன ரெண்டு பேரும் மன்னுச்சிடனும் சாரி நான் லேட்டா வந்துட்டேன் " என்றான் .

ப்ரீதா கோபம் சற்று குறைய ஆரம்பித்தது.மூவரும் நன்றாக சாபிட்டார்கள்.
சத்யா ப்ரீதாவையே பல முறை உற்று பார்த்ததை ப்ரீதா கவனித்து கொண்டு தான் இருந்தாள்.மீனா ,"என்னுடைய சந்தோசத்தை இன்று உங்களுடன் பகிர்ந்து கொண்டேன் ..நான் கூப்பிட்ட உடனே நீங்க வந்ததற்கு நன்றி என்றாள் "
சத்யா ,"என்ன மீனா ...இப்படி சொல்லிட்ட....உன்கிட்ட இருந்து நிறைய ட்ரீட் எ எதிர்பார்கிறேன் ...." என்றான் .ப்ரீதா ," சரி டி ....அம்மா தேடிட்டு இருப்பாங்க ...நான் கிளம்புறேன் ...சரி சத்யா நான் வர்ரேன் " என்று சொல்லி கிளம்பினாள்.
சத்யா மீனாவிடம் ,"எனக்கு ப்ரீதாவின் மொபைல் நம்பர் கொடு என்று கேட்டு வாங்கினான் .மீனா ,"இவன் எதற்கு அவள் நம்பர் வாங்குகிறான் என்று குழம்பினாள் ".......................................

08 February 2010

அன்புள்ள அண்ணி 5

மறுநாள் ஆபீஸ் சென்ற ப்ரீதாவுக்கு ,அவளது டீமில் உள்ள ஒரு ஓபனிங் தெரிய வர தன்னுடைய நெருங்கிய தோழி மீனாவுக்கு தெரிய படுத்தினாள்.
ப்ரீதா இந்த அலுவலகத்தில் பல நாள் பணியாற்றினாலும் நெருங்கிய நண்பர் என்று எவரும் இல்லை.ப்ரீதாவும் அவளுண்டு அவள் வேலையுண்டு என்று தான் இருப்பாள்.எப்படி யாவது மீனாவை தன்னுடைய கம்பெனயில் சேர்த்துவிட வேண்டும் என்ற ஆசை இப்போது மேலோங்கி இருந்தது ப்ரீதாவுக்கு .மீனாவுக்கு மறு நாள் இண்டர்வியு க்கு ஏற்பாடு செய்தாள்.

வீட்டிற்கு சென்ற ப்ரீதாவிடம் பேசுவதற்கு அம்மாவும் அப்பாவும் காத்து இருந்தார்கள். ப்ரீதா சளிப்புடன் ," இன்னைக்கும் யாராவது என்னை பெண் பார்க்க வருகிறார்களா ?,நான் ரெடியாக வேண்டுமா ?"என்று கேட்டாள்.மாணிக்கம் ,"இல்லம்மா நாங்க உனக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தோம் ,ஆனா வருவர்களிடம் அது இல்லை ,இது குறை என்று நீ சொல்லுகிறாய் ...உனக்கு யாரையாவது ........உன்னுடைய கம்பெனயில் வேலை பார்கிறவரை பிடித்திருந்தால் சொல்லு ....நானும் அம்மாவும் அவுங்க வீட்டில் போய் பேசுறோம் ...உன்னுடைய ஆசை தான் எங்களுடைய ஆசை....எதுவா இருந்தாலும் தயங்காம சொல்லு " என்றார். ப்ரீதா ,"என்னப்பா அப்படி இருந்தா உங்க கிட்ட தான் முதல்ல சொல்லி இருப்பேன்.....அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை....எனக்கு அவர்களை பிடிக்கவில்லை அதுதான்....நீங்க வேற நல்ல மாபிள்ளைய பாருங்கப்பா.....இத பத்தி கவலை பட்டு மனச குழப்பிக்காதிங்க பா " என்று தன் அறையை நோக்கி விரைந்தாள் .

தனக்கு நல்ல வாழ்க்கை துணைவரை, தான் வணங்கும் தெய்வம் தான் கூடிய சீக்கிரம் காண்பிக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து விட்டு படுத்தாள். மறு நாள் காலை , மீனாவுக்கு போன் பேசினாள்...நன்றாக இண்டர்வியு க்கு ப்ரிபேர் செய்து வருமாறு தெரிவித்தாள் . ஆபீஸ் சென்ற ப்ரீதா, தன் தோழி மீனாவை தேடினாள்.மீனா ,இரெண்டாவது கட்ட இண்டர்வியு சென்றிருந்தாள்.

ப்ரீதாவும் தன் கேபினுக்கு சென்று தன் வொர்க்கை தொடர்ந்தாள்.ப்ரீதாவின் ப்ராஜெக்ட் மேனேஜர் அருணிடம் இருந்து அழைப்பு வர சென்ற அவளிடம் , "ஹாய் ப்ரீதா ,மீனா செலக்ட் ஆகிட்டாங்க ...உங்க டீம் ல தான் அவர்கள அப்போயன்ட் பண்ணி இருக்கோம்.....நீங்க தான் இவர்களுக்கு ட்ரைனிங் கொடுக்கணும் ......உங்க ரேபிர்றல் ன்னு நினைக்கிறேன் .....சந்தோசம் தானே ....இன்றே அவர்களை ஜோஇன் பண்ண சொல்லிட்டேன் !!"என்று சொல்ல ப்ரீதாவுக்கு எல்லை இல்லா மகிழ்ச்சி.மீனாவை கூட்டி சென்று அவள் டீமில் உள்ள அனைவரையும் அறிமுக படுத்தினாள் . நீண்ட நாள் விலகி இருந்த நட்பு.....மீண்டும் ஒன்று சேர்ந்ததில் இருவருக்கும் ஆனந்தம் .

மீனாவிடம் ,"எப்படியோ என்னுடைய டீம்ல வந்து சேந்துட்ட .....எப்போ எனக்கு treat கொடுக்க போற ....நானும் உன்கிட்ட நிறைய பேசணும் " என்று சொல்ல ..."இன்னைக்கு evening வச்சிக்குவோம்.. என்றாள். மாலை ஆனது இருவரும் அவர்கள் கம்பெனி அருகில் இருந்த restaurant க்கு சென்றார்கள்.....



04 February 2010

அன்புள்ள அண்ணி 4

மீனா ப்ரீதாவின் நெருங்கிய தோழி.....சிறு வயது முதல் ஒரே பள்ளி ,ஒரே வகுப்பு ,ஒரே கல்லூரி என்று இவர்கள் பயணம் தொடர்ந்தாலும் ,கல்லூரியில் மீனாவுக்கு கிடைத்தது (ECE) எலெக்ட்ரானிக்ஸ் பிரிவு தான் ,ப்ரீதாவுக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் கிடைத்தது.மீனாவின் மூலம் தான் இந்த கம்பெனிக்கு ப்ரீதா வந்தாள் .எனவே ப்ரீதா எப்படியாவது மீனாவுக்கு உதவி செய்ய எண்ணினாள் . மீனாவின் ரெசுமை வைத்து கொண்டு அவள் கம்பெனியில் உள்ள அனைத்து ஜாப் ஒபெனிங்க்ஸ் பார்த்தாள்.ஒன்றும் மீனாவுக்கு ஏற்றது போல் இல்லை.சரி பொறுத்திருந்து பார்ப்போம் என்று நினைத்தாள்.

வீடு சென்ற ப்ரீதாவுக்கு , அன்று இன்னொரு மாப்பிள்ளை வீட்டார் வருவது தெரிந்தது.சரி இந்த இடமாவது அமைய வேண்டும் என்று மாணிக்கமும் மாலாவும் பிரார்த்தனை செய்து கொண்டார்கள் .ப்ரீதாவும் தன்னை தயார் செய்து கொண்டு காத்திருந்தாள்.அவர்களும் வந்தார்கள்,....மாப்பிள்ளை ராகுல் , பல நகை கடைகளின் உரிமையாளர் . பல வீடுகள்,பல கடைகள் என்று ,ப்ரீதாவின் குடும்பத்தை விட பல மடங்கு உயர்ந்தவர்கள்.ராகுலும் பார்பதற்கு நன்றாகவே இருந்தான். ராகுலின் அம்மா ,"எங்களுக்கு பொண்ண பிடிச்சிருக்கு ,பொண்ணு வேலை பார்க்கிறதா சொன்னீங்க.... எங்க குடும்பதுல ,பெண்கள் யாரும் வேலைக்கு போறது இல்ல....ப்ரீதாவும் திருமணத்திற்கு பிறகு வேலைய விட்டுட்டு எங்க வீட்டு மருமகளா இருக்கணும்னு நாங்க ஆசைபடுகிறோம்....ராகுலும் அதையே தான் விரும்புறான்... அவன் கூட பேருக்கு ஒரு டிகிரி வச்சிருக்கான்....கடைய பார்த்துக்க என்ன பெரிய படிப்பு வேணும் ? சொல்லுங்க " என்று சொன்னார்.

இதை கேட்ட ப்ரீதா அதிர்ச்சி அடைந்தாள். இரு குடும்பத்தினரும் சில நிமிடம் பேச ,மாணிக்கம் ,"நாங்க ப்ரீதாகிட்ட கலந்து பேசிட்டு உங்க கிட்ட பேசுறோம் " என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தார்.ப்ரீதா கோபத்தின் உச்சிக்கே சென்றாள்."என்னால் வீட்டிலே சும்மா உட்கார முடியாது பா....நான் இன்ஜினியரிங் படித்து முடித்து நல்ல வேலையில் இருக்கிறேன்...Ph.D படிக்கணும் ன்னு ஆசை இருக்கு ,படிப்பை பற்றி தெரியாத இந்த குடும்பமே வேணாம் பா ..........வேற நல்ல மாப்பிள்ளை பாருங்கப்பா" என்று சொன்னாள்.
அதற்கு மாலா ,"ப்ரீதா அப்படி எல்லாம் சொல்லாத...நான் என்ன வேலைக்கா போனேன்...வீட்டில் இருந்து தான் உன்னை கவனிச்சேன்....அவர்களோட கருத்தை சொல்றாங்க ...நீ கோபபடாத ...உனக்கு இந்த மாப்பிள்ளை வேணாம்னா விட்டுவிடு...நாங்க சொல்லிடுறோம் ...வேற இடம் பார்க்க ப்ரோகர்ட சொல்றோம் " என்று கூறினாள். என்ன தான் மாலா கூறியது சரியாக இருந்தாலும் ப்ரீதாவால் ஏற்று கொள்ள முடியவில்லை.நம் வேலைய பாப்போம் என்று அவளுடைய லேப்டாப் பில் மூழ்கினாள்.

03 February 2010

அன்புள்ள அண்ணி 3

பணம்,பதவி,அழகு,படிப்பு என அனைத்தும் ஒருங்கிணைந்த பெண்ணுக்கு கேட்கவா வேண்டும்...?? பலர் ப்ரீதாவை பெண் பார்க்க போட்டி போட்டு வந்தனர். மாணிக்கத்திற்கு ஜாதகம் ,ஜோசியம் இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை. நம் மகளை நன்றாக பார்த்துகொள்ளுபவன் தான் மருமகனாக வேண்டும் என்று நினைத்தார்.

அப்படி தான் ஒரு நாள்....ஒரு குடும்பம் ப்ரீதாவை பெண் பார்க்க வந்தது..மாப்பிள்ளை பிரபு சொந்தமாக பிசினஸ் செய்கிறார்.....நல்ல பணக்கார குடும்பம்....ஒரே மகன் தான்...ஆனால் பிரபுவின் பெற்றோர் ......பணத்திலேயே குறியாக இருந்தார்கள்....எவ்வளவு சொத்து இருக்கிறது?பெண்ணுக்கு எவ்வளவு நகை போடுவீர்கள் ??கார் எத்தனை உள்ளது ?வீடு கட்ட எவ்வளவு ஆனது ?என்று அவர்களின் கேள்விகள் இருந்தது ....ப்ரீதாவை பற்றி அவர்கள் எதுவும் கேட்கவில்லை...? கேட்கவும் விரும்பவில்லை...பிரபுவோ ஒன்றும் பேசாமல் ,அவன் பெற்றோர் சொல்வதற்கு ஆமாம் சாமி போட்டு கொண்டிருந்தான்...இதனை கண்ட ப்ரீதாவுக்கு ,அந்த குடும்பத்தின் மீதே வெறுப்பு வந்தது...

அவர்கள் சென்றவுடன் ,ப்ரீதா ,"அப்பா இந்த குடும்பத்தை கவனிசீங்களா ?அவர்களின் நோக்கம் பணத்திலே இருக்கிறது..........அவர்களே பெரும் பணக்காரர்கள் தான் இன்னும் பணத்தை நம்மிடம் இருந்து கரக்கவே ஆசை படுகிறார்கள்.....இப்படி பட்டவர்கள் முன்னே என்னை நிக்க வைக்காதீர்கள்" என்று ஆவேசமாக கூறினாள்.மாணிக்கமும் ,"ஆமாண்டா நான் கூட கவனிச்சேன் ,அவர்கள் வீட்டையும் ,காரையும்,சுத்தி வைத்துள்ள பொருட்களையும் ,நீ போட்டிருக்கும் நகைகளையும் தான் பார்த்து கொண்டிருந்தார்கள்.....அவர்களே வலிய வந்தாலும் ...நான் உன்னை அந்த பிரபுவுக்கு கட்டி தர மாட்டேன் " என்றார்.

ப்ரீதா,"இனி அடுத்து நல்ல இடமா பாருங்கப்பா " என்று சொல்லிவிட்டு ஆபீஸ் சென்றாள்.ஆபீஸ் சென்ற அவள் ,தன் தோழி மீனாவிடம் பேசலாம் என்று அவளை கைபேசியின் மூலம் அழைத்தாள் ."ஹலோ மீனா எப்படி இருக்கிற? உன் வேலை எப்படி போயிட்டு இருக்கு ?" என்று கேட்க ...மீனா ,"இப்போ naan வேலையில் இருக்கிற கம்பெனி சின்னது தான் ...வேலை வேலைன்னு என்னை கசக்கி புழியறாங்க ...எனக்கு இந்த கம்பெனி புடிக்கவேஇல்ல இருந்தாலும் இன்னும் பல கம்பனிக்கு ட்ரை பண்ணிட்டு தான் இருக்கேன் ....உங்க கம்பனில்ல ஏதாவது வேகன்சி இருந்தா சொல்லு ப்ரீதா ?மீனா நீ நல்ல பொசிசன்ல இருக்கன்னு தான் நான் நெனைச்சுட்டு இருந்தேன்.....உன்னோட லேட்டஸ்ட் ரேசுமை எனக்கு மெயில் ல அனுப்பு.....உனக்கு ஏற்ற ஜாப் இருக்கான்னு பார்கிறேன் "..என்றாள். மீனாவும் அவ்வாறே செய்தாள்.

02 February 2010

அன்புள்ள அண்ணி 2

ப்ரீதாவுக்கு தெரிந்த கேள்விகள் கேட்கப்பட ,சரியாக விடை அளித்தாள்.அன்றே அவளுக்கு Apponitment letter கிடைத்தது.அனால் அவளை அழைத்து சென்ற மீனாவுக்கு வேலை கிடைக்கவில்லை.ப்ரீதா நினைத்தது பலித்தது ....மிகவும் சந்தோஷ பட்டாள். வீட்டிற்கு போகும் வழியில் கோவிலுக்கு சென்று கடவுளை வணங்கி நன்றி சொன்னாள்.மாணிக்கம் மாலாவிடம் சொல்லி ஆனந்தபட்டாள்.ப்ரீதாவின் பெற்றோருக்கு அவள் வேலைக்கு செல்வதில் பெரிய மகிழ்ச்சியில்லை.....காசு பணம் அவர்களுக்கு முக்கிய தேவையில்லை....இருந்தும் ப்ரீதாவின் ஆசைக்கு இணங்கினார்கள்.

வேலையில் சேர்ந்த ப்ரீதா முழு திறமையோடும் , கடின உழைப்போடும் அவள் பணியில் இடுபட்டாள்.இதனால் சிறிது காலத்திலே பதவி உயர்வும் பெற்றாள். ப்ரீதா அதிர்ஷ்டசாலி , புத்திசாலி ,அழகி அதனால் தான் இவளால் இப்படி ஒரு நிலைமைக்கு வர முடிகிறது ...என்று பலரும் இவளின் முன்னேற்றம் கண்டு உள்ளுக்குள் குமுறினார்கள்.எதை பற்றியும் கண்டுகொள்ளாமல் .....தன் வேலையில் கவனம் செலுத்திவந்தாள்.இப்படியே ஆண்டுகள் உருண்டோடின....மாணிக்கமும் மாலதி உம் ப்ரீதாவுக்கு திருமணம் செய்ய எண்ணினார்கள்.

எனவே ஒரு நாள் ,ப்ரீதாவிடம் இது பற்றி பேச ஆரம்பித்தார்கள். மாணிக்கம் ,"ப்ரீதா உனக்கு வயசாகி கொண்டே போகிறது , நீயும் வேலைக்கு சென்று இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது ...உனக்கு திருமணம் செய்யலாம்னு நானும் அம்மாவும் நினைக்குறோம் ...உனக்கு எப்படி பட்ட மாப்பிள்ளை வேணும் ?? உனக்கு ஏதாவது கனவுகள் இருக்கா ? இதுவரை எல்லாம் உன் இஷ்டம் போல தான் நடந்தது ,இனியும் உன் ஆசை போல் தான் நடக்கும் ....நீ சொல்லு மா....நான் எனக்கு தெரிந்த ப்ரோகரிடம் சொல்லி வைக்கிறேன் " என்றார். " இன்னும் சில மாதங்கள் போகட்டும் பா ...நான் இன்னும் நல்ல நிலையில் வந்திடுவேன் .......இப்போ என் திருமணத்திற்கு என்ன அவசரம்? நான் உங்க கூட இருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லையா?"என்று ப்ரீதா கேட்டாள்.

"நீ என்ன இப்படி சொல்லிட்ட நீ எங்களோடு இருந்தால் தான் எங்களுக்கு சந்தோசம் ....நீ தான் எங்களுடைய ஒரே மகள்....உன்னுடைய திருமணத்தை விமரிசையாக நடத்த வேண்டும் என்பது எங்களுடைய ஆசை...இப்போது உனக்கு பார்க்க ஆரம்பித்தால் தான் சிலமாதங்களில் நல்ல வரன் கிடைக்கும் ....நீ வேலை பார்த்து கொண்டே இரு,நாங்கள் உனக்கு மாப்பிள்ளை பார்த்து கொண்டு இருக்கிறோம் .....உனக்கு அந்த மாப்பிள்ளை பிடித்திருந்தால் தான் திருமணம் என்று மாலா சொன்னார்.இவ்வாறு ப்ரீதாவின் பெற்றோர் ஒருவாறு அவளை சமாதானம் செய்து ,அவளின் புகைப்படத்தையும் ,விவரங்களையும் பல ப்ரோகரிடம் கொடுக்க ஆரம்பித்தார்கள்.