19 January 2010

தெளிவான் முடிவு 25

சரஸ்வதி சுதாவிடம் ,"நீ வந்த போதே கேட்கனும்னு இருந்தேன் ,என் பேத்தி சுர்யாகுட்டி எங்க ? எப்படி இருக்கா என் பேத்தி ?" சுதா ,"நல்லா இருக்கா மா,அவளை என் பிரின்ட் வீட்ல விட்டுட்டு தான் வந்தேன் ,நாம போகும் போது அப்படியே கூட்டிகிட்டு போயிடலாம் " என்று சொன்னாள்.

சுரேஷும் சுனிலும் உள்ளே வந்தார்கள். சுனில் ,"சரி மா நான் கிளம்புரேன் , உடம்ப பாத்துகோங்க ,நாளைக்கு வீட்டில் வந்து பார்கிறேன்" , என்று சரஸ்வதியிடம் சொல்லிவிட்டு , ஸ்வேதா நான் வரேன் என்று சொல்லி கிளம்பினான். இவர்களும் ஹாஸ்பிடல் விட்டு கிளம்பி ,சூர்யாகுட்டியை அழைத்து , வீடு வந்து சேர்ந்தார்கள்.

சுரேஷ் ,"அத்த எப்படி எங்க selection ,சுனில உங்களுக்கு புடிச்சிருக்கா? " என்று கேட்க சரஸ்வதி ,"அந்த தம்பி என்னை முன்ன பின்ன தெரியாட்டாலும் ,ஆஸ்பத்திரி யில் வந்து பார்த்ததும் பேசிய விதமும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ,இனிமே தள்ளி போட வேணாம் , சுனிலின் அம்மா அப்பாவ நம்ம வீட்டுக்கு வர சொல்லுங்க ,நாளைக்கே இத பத்தி பேசிடலாம்"
என்றாள்.தன் நிலைமையை கூட மறந்து சரஸ்வதி தன் மகளின் எதிர்காலத்தை பற்றி இவ்வாறு முடிவெடுக்க வைத்தது சுனிலின் நடவடிக்கை.

சுதா ,"ஆமா மா ,நீ சொல்றதும் சரி தான் .நாம சீக்கிரமே முடிவெடுக்கணும் . இவ்வளவு சீக்கிரம் ஸ்வேதாவுக்கு திருமணம் கூடி வரும் ன்னு நான் நினைக்கல,ஸ்வேதா அதிர்ஷ்டசாலி தான் ... முதல்ல வேலை கெடச்சது உடனே திருமணமும் அமைய போகுது " என்று ஆனந்தபட்டாள்.சுரேஷும் ,"சரி அத்த ,நான் சுனிலின் அம்மாவுக்கு நாளைக்கு போன் பண்ணி நல்லநேரம் பார்த்து வர சொல்லறேன் " என்றான் .

இவ்வாறு அனைவரும் மகிழ்ச்சியாக பேசி கொண்டிருக்க ,ஸ்வேதா மட்டும் தன் அறையில் இங்கும் அங்குமாக நடந்து கொண்டிருந்தாள். "சேகர் சொல்லியதால் தான் இவ்வளவு பிரச்சனை எனக்கு ...அவன் சொல்லாமல் இருந்தால் ,எவ்வளவு நல்லா இருக்கும் .... நாம சேகரிடம் என்ன சொல்லலாம் ? சுனிலையே திருமணம் செய்து கொள்ளலாமா ? அம்மாவிடம் இவ்வாறு நடந்ததை சொல்லி யோசனை கேட்கலாமா ? எனக்கு பைத்தியமே பிடிச்சிடும் போல இருக்கு " என்று தனக்குள்ளே பேசி நொந்து கொண்டாள்.

No comments:

Post a Comment