20 January 2010

தெளிவான முடிவு 26

மறு நாள் காலையும் வந்தது.சுரேஷ் சுனிலின் அம்மாவுக்குஅழைத்து பேசினான்,அவர்கள் அனைவரும் மாலை 6 மணிக்கு வருவதாக கூறினார்கள்.
அதை எல்லோரிடமும் கூறினான்.சரஸ்வதி ,ஸ்வேதாவை லீவ் போட சொன்னாள்.இருந்தாலும் ஸ்வேதா சீக்கிரம் வந்து விடுவதாக சொல்லி புறபட்டாள். சென்டர் சென்றதும் சேகர் வாசலில் நின்றவனாய் ,"வாங்க ஸ்வேதா ,உங்களுக்காக தான் காத்திக்கிட்டு இருக்கேன் ....நீங்க எங்க வராம போயிடுவீங்களோ ன்னு நெனச்சேன் .....சரி உங்க அம்மா எப்படி இருக்காங்க ? டிஸ்சார்ஜ் ஆயிட்டாங்களா ?என்று கேட்க
ஸ்வேதா , "அம்மா வீட்டுக்கு வந்துட்டாங்க ,நல்லா இருக்காங்க ...என்ன விஷயம்?என்ன ஏன் எதிர்பார்த்தீங்க? "என்று சொன்னாள்.

சேகர்,"நாம இன்னைக்கு ஒரு faculty position க்கு இண்டர்வியு நடத்தனும்..இப்போ தான் கோபாலன் சார் சொன்னார் .சார் க்கு தெரிந்த பள்ளியில் இருந்து , பத்து மாணவர்கள் இங்க படிக்க வர்ற்ராங்களாம் , அவர்களுக்கு கிளாஸ் எடுக்க ஒரு ஆள் தேவபடுது , அதுக்காக நாம ஒரு staff செலக்ட் பண்ணனும் அதுக்கு தான் , இந்த இண்டர்வியு.நீங்க முதல் ரவுண்டு கண்டக்ட் பண்ணுங்க ,நான் ரெண்டாவது ரவுண்டு செலக்ட் பண்ணறேன் ,அதற்கப்புறம் கோபாலன் சார் பாத்துக்குவார். "என்று சொன்னான்.ஸ்வேதாவும் ,"சரி சார் நாம நல்லா பண்ணிடலாம் .எப்படி, எங்க நடத்த போறோம் ? எத்தன பேர் வர்றாங்க ?எப்போ எல்லோரும் வருவாங்க ?"என்று கேட்டாள்.

சேகர் எப்படி நடத்த வேண்டும்...எவ்வாறு நடத்த வேண்டும் என்பதை எல்லாம் சொல்லி கொடுத்தான்," ஸ்வேதா 6 பேர் வருவாங்க. பத்து மணிக்கு தான் வருவாங்க நீங்க 3 பேர வடிகட்டி 3 பேர மட்டும் என்கிட்டே அனுப்புங்க ...நான் கொடுத்திருக்கும் இந்த சீட்ல உங்க நோட்ஸை எழுதுங்க அது எனக்கு ரொம்ப உதவியா இருக்கும் " என்றான் .ஸ்வேதாவும் அதற்கு சம்மதித்தாள். பத்து மணியும் ஆனது ,ஆறு பேரும் வந்து காத்திருந்தார்கள்.
அவளுக்கு தெரிந்த விதத்தில் கேள்விகள் கேட்டு மூன்று பேரை செலக்ட் செய்தாள். மூவரில் அவளுக்கு மிகவும் பிடித்தது சரண்யாவை தான்.அவள் சரளமாக பேசிய ஆங்கிலத்தையும், அவளுக்கு உள்ள கம்ப்யூட்டர் அறிவையும் கண்டு ஸ்வேதா ஆச்சரியபட்டாள் "இவள் நம்மை விட மிகவும் சிறந்தவளாக, திறமை உள்ளவளாக இருக்கிறாள் " என்று சொல்லி கொண்டாள். அவள் தேர்ந்தெடுத்த resumes ஐ சேகரிடம் கொடுத்தாள்.

No comments:

Post a Comment