அனைத்தையும் பார்த்த சேகர் ,அவர்களை நேர்முகத்தேர்வு செய்தான் .கோபாலன் அங்கு வர ,"நல்ல கேண்டிடேட்ஸ் ஐ தேர்ந்தெடுத்து விட்டீர்களா ?ஸ்வேதா நீங்களும் ,சேகரும் உள்ளே ரூம் க்கு வாங்க ,நாம ஒருத்தர செலக்ட் பண்ணிடலாம் " என்று சொன்னார்.சேகரும் ஸ்வேதாவும் உள்ளே சென்றார்கள்.சேகர் கோபாலனிடம் ,"இந்த பெர்சன் ரகு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு , He performed well in the interview,we can select him என்று ரகுவின் CV யை கொடுத்தான் .கோபாலனும் பார்த்து ,"ஒ.கே அவரை என்னிடம் அனுப்புங்க " என்று சொன்னார். கோபாலானும் ரகுவையே தேர்வு செய்தார்.
ஸ்வேதா , சேகர் கட்டாயம் அந்த சரண்யாவை தான் செலக்ட் செய்வார் என்று நினைத்தாள் , ஆனால் ரகுவை ஏன் செலக்ட் செய்தார்? சரண்யாவுடன் ஒப்பிட்டு பார்த்தாள் ரகுவுக்கு அவ்வளவு திறமை இல்லையே என்று நினைத்து கொண்டிருந்தாள்.. மதியம் swetha சேகரிடம் ,"ஏன் சார் நீங்க சரண்யாவா செலக்ட் செய்யல , நான் தான் நிறைய பாய்ண்ட்ஸ் கொடுத்திருந்தேனே "? என்று கேட்டாள் .சேகரும் ,"ஆமா ஸ்வேதா சரண்யா நல்லா பண்ணி இருந்தாங்க ...ஆனா நமக்கு அவுங்க தேவையில்ல ,நம்மை விட அதிகம் தெரிந்திருந்தா ,நாம சொல்றத கேட்க மாட்டாங்க , அவுங்க எல்லாம் தெரிஞ்சவங்க ன்னு ஆட்டம் போடுவாங்க ...நான் ஏன் ரகுவை செலக்ட் செஞ்சேன்னா அவனும் நம்ம லெவல் எ தான் இருக்கான்.நாம சொல்றத கேட்டு நடந்துக்குவான் .."என்றான் .இந்த பதிலை ஸ்வேதா கொஞ்சமும் சேகரிடம் இருந்து எதிர் பார்க்கவில்லை.
மூன்று மணி போல் சுதா ,ஸ்வேதாவுக்கு போன் செய்து "ஸ்வேதா நீ கிளம்பி வீட்டுக்கு வா,சுனில் வீட்ல இருந்து எல்லோரும் ஆறு மணிக்கு வந்திடுவாங்க ...நானே லீவ் போட்டுடேன் ,சீக்கிரம் வா " என்று சொன்னாள். ஸ்வேதாவும் ,கோபாலனிடம் சொல்லி விட்டு வீடு வந்தாள்.மனது குழப்பத்துடன் இருந்தாலும் ,காலம் பதில் சொல்லட்டும்,மண்டபம் வரை வந்த திருமணம் கூட சில சமயம் நின்று போவதுண்டு.என்ன நடந்தாலும் நாம் ஏற்று கொள்ளனும் என்று தன்னையே தயார் செய்து கொண்டாள்.
அனைவரும் எதிர் பார்த்தது போல ,சுனில் தன் பெற்றோருடன் வந்திருந்தான்.
சுனிலின் அம்மா அப்பா சோபாவில் அமர சுனில் நாற்காலியில் உட்கார்ந்திருந்தான்.சரஸ்வதி அவர்களை பற்றியும் குடும்பத்தை பற்றியும் பேசி கொடிருந்தார்.சுனில் கண்கள் ஸ்வேதா வை தேடி கொண்டிருந்தன.ஸ்வேதா பட்டு புடவை உடுத்தி,தலை நிறைய பூ வைத்து .அலங்காரம் செய்து தன் அறையுள் அமர்ந்திருந்தாள். சுரேஷும் சுனிலுடன் பேச்சு கொடுக்க ஆரம்பித்தான் . சுனிலின் அம்மா சுமதி ,"சரி நாம பேசிட்டே இருந்தா ஸ்வேதாவ வர சொல்லுங்க ,நாங்க தான் ஏற்கனவே ஸ்வேதாவ பாத்தாச்சு ,சும்மா நாம பேசும் போது ,அவ உள்ள இருந்து என்ன பண்ணுவா? ,வர சொல்லுங்க சீக்கிரம் என் மருமகள பார்க்கணும் ........." என்றார்.இதை கேட்ட சரஸ்வதிக்கு சந்தோசம் "நான் இப்பவே வர சொல்றேங்க ....சுதா நீ போய் ஸ்வேதாவ கூட்டிட்டு வா "என்றாள்
Hello world!
-
Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then
start writing!
3 years ago
No comments:
Post a Comment