அடடா சுனில் நம் வீட்டிற்கு வந்தும் நம்மால் பேச முடியவில்லையே... என்று தன்னையே நொந்து கொண்டாள். அப்போது சுரேஷும் சுதாவும் பேசி கொண்டிருப்பது காதில் விழுந்தது .சுதா , " என்ன இது புதுசா இருக்கு ,நீங்க ஏன் சுனிலை வீட்டிற்கு அழைத்து வந்தீங்க ? பெண் பார்க்கவே வீட்டிற்கு வராதவன் ,இன்னைக்கு மட்டும் ஏன் வந்தான் ? முன்ன பின்ன தெரியாத அவன் வீடு கிரகப்ரவேசதுக்கு நம்ம போனுமா ? ஸ்வேதா வ நேத்து தான் பார்த்தான்,இன்னும் அதுக்கே முடிவு தெரியல ....இது என்னமோ எனக்கு சரியாய் படல " என்று அடுக்கி கொண்டு போனாள்.
"நீ ஏன் அப்படி நினைக்கிற ..சுனில் எனது நண்பனின் நண்பன் ..நண்பன் என்ற முறையில் நம்மை கூப்பிடிருக்கிறான் .இதுல என்ன தப்பு இருக்கு ?உன்னால முடிஞ்சா போ ,இல்லேன்னா போகாதே ....ஸ்வேதாவை அவனுக்கு பிடிச்சிருக்குன்னு தான் நினைக்கிறேன்...அதனால கூட அவன் நம்மல அழைத்திருக்கலாம் , " என்று சுரேஷ் தொடர,ஸ்வேதா குறிகிட்டாள்.
" மாமா நீங்க பேசினத நான் கேட்டுகிட்டு தான் இருந்தேன் ...இன்னைக்கு நான் சுனிலுக்கு மதியம் போன் செய்தேன் ,என்னோட கொலீக் வந்ததால, அவர்ட்ட சரியாய் பேச முடியல,நீங்க வந்ததும் சொல்லலாம்னு நெனைச்சேன் ,மாமா நாளைக்கு எத்தனை மணிக்கு நாம் சுனில் வீட்டுக்கு போறோம் " என்று ஸ்வேதா சொல்ல,சுதா கோபத்தில் ," என்னடி பேசற, நாங்க போகலாமா போக வேண்டாமா ன்னு சண்ட போட்டுட்டு இருக்கோம்.நீ என்னன்னா எப்போ போகலாம் ன்னு கேக்குற .?அந்த சுனில்..இன்னும் பதிலே சொல்லல ...அவங்க வீட்டுக்கு எந்த முறை வச்சி போறது ?
அதற்கு ஸ்வேதா ," மாமா சொன்ன மாதிரி ,நாம friend என்ற முறையில் போவோம் ....இதுல ஒன்னும் தப்பில்லக்கா ..."என்று பேச ,சுதா பதிலுக்கு ,"சரி நீங்க ரெண்டு பேரும் சொல்றதால நாம நாளைக்கு போவோம் ,"
என்றாள்.எப்படியோ அக்காவை சம்மதிக்க வைத்து விட்டோம் என்ற திருப்தியில் ,ஸ்வேதாவுக்கு மனதிற்குள் மகிழ்ச்சி ...நாளை எப்படியும் சுனிலை பார்க்க போகிறோம் ,அவனோடு பேச போகிறோம் என்று கனவுகளில் மிதந்தாள்.
Hello world!
-
Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then
start writing!
3 years ago
No comments:
Post a Comment