23 January 2010

தெளிவான முடிவு 28

சுதாவும் சென்று ஸ்வேதாவை கையில் காபி தட்டுடன் அழைத்து வந்தாள்.ஸ்வேதாவும் அனைவருக்கும் காபி கொடுத்து விட்டு அமர்ந்தாள். சுமதி ," நான் சுத்தி வலச்சு பேச விரும்பல ,நேரடியா விசயத்துக்கு வரேன் சுனிலுக்கு ஸ்வேதாவ பிடிச்சிருக்கு . ஸ்வேதாவுக்கும் சுனிலை பிடிச்சிருக்கும் ன்னு நினைக்கிறேன் . நான் எங்க ஜோசியர்ட்ட பேசிட்டு ஒரு நாள் சொல்றேன் ,அன்னைக்கு நாம தாம்பூலம் மாத்திக்கலாம் ...அன்றே கல்யாண நாளையும் குறிச்சிடலாம் ." என்று சொன்னாள் .

சரஸ்வதி ,"நீங்க எல்லாம் சொன்னீங்க ,எவ்வளவு நகை போடணும் ....கையில் பணம் எவ்வளவு எதிர்பார்கிறீங்க ன்னு சொன்னா நல்லா இருக்கும்" என்று கேட்க ," நீங்க உங்க பொண்ணுக்கு என்ன செய்யணும்னு விருப்பபடுரீன்களோ அதையே செய்யுங்க ....எங்களுக்கு இருப்பது ஒரே மகன் .அதனால எங்களுக்கு எதுவும் வேணாம் .நாங்களே திருமண செலவு எல்லாம் பார்த்துக்குரோம்.திருமணத்திற்கு பிறகு எங்களையும் சுனிலையும் நன்றாக கவனித்தாலே போதும் ..."என்று சொன்னாள் சுமதி .சரஸ்வதிக்கு இதை கேட்டதும் எல்லையில்லாத ஆனந்தம் ...."ரொம்ப சந்தோசங்க நீங்க நல்ல நாளா ஜோசியர்ட்ட கேட்டுட்டு சொல்லுங்க ...நாம ஆக வேண்டியத பார்க்கலாம் "என்றார்.இப்படியே பேசி விட்டு ,சுனிலும் பெற்றோரும் கிளம்பினார்கள்.

சுனில் ,ஸ்வேதா ஏதோ மனசஞ்சலத்தில் உள்ளாள் என்பதை உணர்ந்தான்.அவர்கள் சென்றவுடன் ஸ்வேதா தன் அறைக்கு சென்றாள்.சரஸ்வதி ஸ்வேதாவை பின் தொடர்ந்து வந்தாள்."ஸ்வேதா உனக்கு சுனிலை பிடிச்சிருக்கா ? நீ ஏன் சோகமா இருக்க ,நான் உன்ன கவனிச்சிட்டு தான் இருந்தேன் ....சுனிலை பிடிக்கலன்னா சொல்லு ....நாம நிறுத்திடலாம் ,"என்று சரஸ்வதி சொல்ல ..."அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல மா ....நான் சென்டர்ல இருந்து வந்தேன்ல அந்த அசதி தான்.எனக்கு ஏதாவதுன்னா கட்டாயம் உன் கிட்ட தான் சொல்லுவேன் மா நீ போய் தூங்கு "என்று சொல்ல ,அவளும் சென்றாள்.

ஸ்வேதாவுக்கு மறு நாள் காலை கைபேசி அழைக்க , எடுத்து பேசினாள். மறுமுனை சேகர் ,"ஸ்வேதா இன்னைக்கு நான் சென்டர் வர மாட்டேன் ,என் அப்பாவுக்கு உடம்பு சரி இல்ல ...ஆஸ்பித்திரி போகணும் ....நீங்க என் ஸ்டுடண்ட்ஸ் ஐ கொஞ்சம் பார்த்துகோங்க ப்ளீஸ் " என்றான் ஸ்வேதா ...சென்டர்க்கு கிளம்பி கொண்டிருக்க ..திரும்பவும் அவள் கைபேசி அழைக்க ...மறு முனையில் சுனில் ," ஹாய் ஸ்வேதா குட் மார்னிங் ,உங்க கிட்ட கொஞ்ச நேரம் நல்லா பேசணும்னு நானும் ட்ரை பண்றேன் ஆனா முடியல....இன்னைக்கு நீங்க எப்போ ப்ரீ யா இருப்பீங்கன்னு சொல்லுங்க ,நாம மீட் பண்ணலாம் " என்றான்.

No comments:

Post a Comment