சப்னா ஸ்வேதாவிடம் ,"நான் நீ சொன்ன எல்லாத்தையும் கேட்டேன் ......உன் வாழ்க்கை உன் எதிர்காலம் உன் கையில் தான் இருக்குது நீ விரும்புன ஆளை விட உன்ன விரும்புற ஆளை திருமணம் செய்வது தான் நல்லது ன்னு ,நீ சினிமால கூட கேட்டிருப்ப ஆனா இது தான் உண்மை .இப்போ என்ன எடுத்துக்கோ நான் காதலித்து தான் திருமணம் செஞ்சேன் .என்ன அவர் நல்லா வச்சிருக்காரு ....நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன் .நீ சொன்னத கேட்ட போது சுனிலை உனக்கு ரெண்டு நாள் முன்ன தான் தெரியும் , ஆனா சேகரை 3 , 4 மாசமா தெரியும். அதனால நீ யோசிச்சு முடிவெடு ." என்றாள். இதை கேட்ட ஸ்வேதாவுக்கு தலையே சுற்றியது.
சேகர் அவளுக்கு செய்த உதவிகள் நினைவுக்கு வந்தது.அவள் ஷாப்பிங் சென்றது ,மொபைல் வாங்கியது அப்போது சேகர் அவளுடன் நடந்து கொண்ட விதம் ,அணுகிய முறை அனைத்தையும் யோசித்து பார்த்தாள். சேகரின் கண்ணியம் ஸ்வேதாவுக்கு புரிய வந்தது . இந்த விஷயம் அக்கா மாமாவுக்கு தெரிய வேண்டாம் என்று நினைத்து அவர்களிடம் எதுவும் பேசாமல் சீக்கிரமே தன் அறைக்கு சென்று படுத்து கொண்டாள். இரவு முழுவதும் சேகரை பற்றிய சிந்தனையே அவள் மனதை ஆக்கிரமித்தது .
அவனின் மாற்றத்திற்கு காரணம் நாம் தான் என்ற குற்ற உணர்வு அவளுக்குள் எழுந்தது .சரி என்ன ஆனாலும் பரவாயில்லை நாம் சேகரிடம் நாளை பேசிவிட வேண்டும் .....என்று முடிவெடுத்தாள்.மறு நாள் காலையும் வந்தது ,எப்போதும் போல சென்டர்க்கு கிளம்பி கொண்டிருந்தாள் .
அங்கு சுதா வந்து ,"ஸ்வேதா இன்னைக்கு 7 மணிக்கே கிளம்பிட்ட ? நீ நேத்து சீக்கிரமே தூங்க போய்ட்டதால அம்மா வர்ற விசயத்த சொல்ல முடியல , அம்மா நேத்தே கிளம்பிட்டாங்கலாம் காலையில் வந்திடுவாங்க.இன்னைக்கு லீவ் போடு ..அம்மா வர்றாங்க நீ வீட்ல இரு .சென்னை ரயில்வே ஸ்டேஷன் வந்ததும் போன் பண்ணறேன்னு சொன்னாங்க...." என்றாள்.
"அப்படியா அம்மா வர்றாங்களா ரொம்ப சந்தோசம் .....ஆனா ..........
நான் இன்னைக்கு சென்டர் அவசியம் போகணும் கொஞ்ச வேலை இருக்கு,அம்மா வந்ததும் நீ போன் பண்ணு நான் உடனே வந்துடறேன்" என்று சொல்லி புறபட்டாள் ஸ்வேதா.
Hello world!
-
Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then
start writing!
3 years ago
No comments:
Post a Comment