அப்போது மேகம் இருண்டு மழை பெய்ய ஆரம்பித்தது .....திடீரென்று காற்றுடன் மழை வருவதை கண்ட அவள் வேகமாக ஓடி ஒரு கடையின் அருகில் நின்றாள்.குடை ஏதும் இல்லாததால் தன் கையில் வைத்து இருந்த புத்தகத்தை தலையில் வைத்து மறைத்து கொண்டாள்.மொபைல் மணி ஒலிக்க பேசினாள். சுதா மறுமுனையில்,"என்ன ஸ்வேதா கிளம்பிட்டியா சீக்கிரம் வா ...எப்போவும் இந்த நேரம் வந்திடுவ ...உன்கிட்ட பேசணும்னு நானே சீக்கிரம் வீட்டுக்கு வந்துட்டேன் "என்றாள்.ஸ்வேதா ,"அக்கா மழைல மாட்டிகிட்டேன் , வந்துடறேன் நீ பயபடாதே "என்று பேசி கொண்டே பார்த்தால் அங்கு சேகர் நின்றிருந்தான் .
ஸ்வேதா ," சேகர் சார் நீங்க என்ன இங்க நிக்கிறீங்க ?பைக் ல வேகமாக போக வேண்டியது தானே? " என்று கேட்க ,அதற்கு சேகர் " இல்ல ஸ்வேதா என்னோட பைக் க சர்வீஸ் க்கு விட்டுருக்கேன் , இன்னகின்னு பார்த்து இப்டி பேயுது ..ஆமா உங்க அக்கா வந்திருந்தாங்க போலிருக்கு ,நம்ம பியுன் ராமு சொன்னான் என்ன விஷயம் ? ஸ்வேதா " ஒன்னும் இல்ல சார் " என்று முடித்தாள் .மழையும் லேசாக விட ஆரம்பிக்க பஸ் பிடித்து வீடு சென்றாள். சுதாவும் சுரேஷும் அவளுக்காக காத்திருந்தார்கள் .ஸ்வேதா , சுனில் தன்னிடம் பேசிய அனைத்தையும் அவர்களிடம் கூறினாள்.
சுரேஷ் ,"அப்போ சுனிலுக்கு உன்னை பிடிச்சிருக்கு ,இல்லேன்னா ஒருவன் போன் நம்பர் கொடுத்து பேச சொல்லுவானா ? கேள்வி பட்ட வரை அவன எல்லோரும் நல்லவர்னு தான் சொல்றாங்க என்ன சொல்ற சுதா ?"என்று கேட்க அதற்கு சுதா ,"அப்படி சொல்ல முடியாதுங்க .. ஸ்வேதாவ அவருக்கு பிடிச்சிருந்தா நம்ம கிட்ட சொல்லி இருப்பார் ,இல்ல ஸ்வேதா கிட்ட சொல்லி இருப்பார் .அதுக்கு அப்புறம் போன் நம்பர் கொடுத்தா அதுலே அர்த்தம் இருக்கு ..ஆனா அப்படி எதுவும் நடக்கலையே " என்றாள். ஸ்வேதாவுக்கு குழப்பம் அதிகரிக்க அமைதியாக படுத்தாள்.
No comments:
Post a Comment