05 January 2010

தெளிவான முடிவு 11

அவர்கள் இருவரும் கதவை தள்ளி விட்டு வெளியே போனார்கள் .குளு குளு அறை தான் அது ...என்றாலும் ஸ்வேதாவுக்கு வேர்க்க ஆரம்பித்தது.என்ன பேச போகிறார் ? என்ன கேட்க போகிறார் ?என்று பல கேள்விகள் அவளுள் ..ஆனால் சுனில் எந்த வித பதட்டமும் இல்லாமல் அங்கு அமர்ந்திருந்தான்.நிசப்தமாக ஓரிரு நிமிடம் சென்றது.
பின் சுனில் எழுந்து ஸ்வேதாவின் அருகில் சென்று ,"ஹாய் ஸ்வேதா ,I am sunil glad to meet you " என்று ஆரம்பித்தான் .ஸ்வேதாவும் பதிலுக்கு ஹாய் என்றாள் வேறு என்ன சொல்வது என்று அவளுக்கு தோன்றவில்லை .சுனிலே தொடர்ந்தான் ," நான் உங்கள பார்த்ததுமே பிடிச்சிருக்கு என்று சொல்ல விரும்பல ..நீங்களும் என்னை பார்த்த 5 நிமிஷத்துல பிடிச்சிருக்கு ன்னு சொல்ல முடியாது..இது நம்ம இருவரின் வாழ்க்கை..எனவே நீங்க என்னை பத்தி தெரிஞ்சிக்கணும் நானும் உங்கள பத்தி தெரிஞ்சிக்கணும் .ரொம்ப இல்லேனாலும் அட்லீஸ்ட் கொஞ்சமாவது அவசியம் ....இதையே உங்க மாமா கிட்ட சொல்லி இருக்கலாம் ,இருந்தாலும் நானே உங்க கிட்ட சொல்லனும்னு தான் அவர்களிடம் அப்படி சொன்னேன்..இந்தாங்க என்னோட business கார்டு இதுல என் details இருக்கு நீங்க call பண்ணுங்க இல்லேனா உங்க நம்பர் கொடுங்க ,நாளைக்கு பேசலாம் ...இது நீங்க வேலை பார்க்கிற இடம் அதிக நேரம் இங்கு வேணாம்" என்று முடித்தான்.
இவ்வாறு கேட்டதும் ஸ்வேதாவுக்கு என்ன சொல்றதுன்னே தெரியல ...சுனிலின் business card பெற்று கொண்டாள் . "எனக்கு நாளை கால் பண்ணுங்க எப்போனாலும் சரி "என்று கதவை நோக்கி நடந்தான் சுனில் .அவனை பின் தொடர்ந்தாள் ஸ்வேதா ..வெளியே நின்றிருந்த சுரேஷிடம் ஓகே நாம போகலாம் என்று சொல்லி கொண்டே இருவரும் சென்டர்விட்டு வெளியேறினார்கள்.
அவர்கள் சென்றவுடன் சுதா ," என்னடி பேசினீங்க ,உன்ன பிடிக்குதுன்னு சொன்னாரா " என்று ஆர்வமாய் கேட்க ..ஸ்வேதா ," இல்லக்கா அப்படி ஒன்னும் சொல்லல ..என்று இழுத்தாள்.அப்போது அங்கு கோபாலன் வர இருவரும் மௌனமானார்கள் ...சுதா,"தேங்க்ஸ் சார் நீங்க செய்த உதவிக்கு " என்றாள் .தலை அசைத்த படி கோபாலன் தன் அறையை நோக்கி நடர்ந்தார் .
சுதா ,"சரி வீட்டில் இது பற்றி பேசலாம் நான் கிளம்புறேன் ,பாபாவை கூப்பிடனும் மணி ஆயிடிச்சு " என்று அவளும் சென்றாள்.
ஸ்வேதாவுக்கு இன்னும் குழப்பம் அதிகம் ஆனது , ...ஒன்னு "உங்கள பிடிச்சிருக்கு ன்னு சொல்லலாம் இல்லேன்னா பிடிக்கலைன்னு சொல்லி இருக்கலாம் call பண்ணு ன்னாஎன்ன அர்த்தம் எனக்கு தலையே சுத்துது "
என்று தனக்குளே புலம்பினாள் .

No comments:

Post a Comment